பெண் காதல் சொன்னாலும் ஒரு புன்னகையுடன் மறுத்து விடுவான்,ஆனந்தன்.
அவன் படிப்பிலும் "ஏ" கிரேட் தான். சஹானா படிக்க வரும்போதே ஒரு வீட்டை வாங்கியிருந்தான் மாதவன். ஆனந்தன் வந்தவுடன் இருவரும் அந்த வீட்டிலேயே இருந்தனர். முதலில் இருந்தே ஹாஸ்டலில் இருந்ததால், அவர்கள் எல்லா வேலையையும் தாங்களே செய்ய கற்றுக் கொண்டிருந்தனர். அதனால், யார் சீக்கிரம் வருகிறார்களோ, அவர்களே சமயல் செய்து விடுவார்கள். வாரக் கடைசியில் இருவரும் ஒரு வேளையாவாவது இருவர் மட்டும் வெளியே சென்று சாப்பிடுவார்கள். இருவரும் குறித்த நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவார்கள்.
சஹானா விரும்பிய அனிருத்தும் தமிழ் காரர்தான் ஆனால், பல தலைமுறைகள் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர்கள்,
மாதவன், மானசாவிடம் சஹானாவின் காதலைப் பற்றி கூறினான். அவனை ஒரு தீர்க்கமான பார்வையைப் பார்த்தாள், அவள் கணவனைப் பார்த்து, " நீங்க என்ன சொன்னீங்க, நாயர்?" என்று கேட்டாள்
" அவளையே உன் கிட்ட பேசச் சொன்னேன்."
" அவள் பேசட்டும் நாயர், அப்பறம் நாம பேசலாம்."
அவன் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.
அவர்கள் அந்தத் தோட்டத்தில் நடை பயற்சி செய்துக் கொண்டிருந்தார்கள்.
ஆறு மாதத்தில் சஹானா கல்யாணத்தை முடித்தார்கள்.
தொடரும்