புகைப்படத்தில் இருந்த இருவரின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை பார்க்கும் பொது இருவரும் மனம் ஒத்த தம்பதியினர் என்பது புரிந்தது. அதை கிழே வைத்து விட்டு மற்ற புகைப்படத்தை எடுத்தான். அவன் நினைத்தது போல் அது மூன்று தோழிகளின் படம் தான். மூவருமே அவன் அறிந்தவர்கள் தான். புகைப்படத்தில் கீதா, இந்து, வீணா மூவருமே சற்று இளம் வயதினராய் தோன்றினார்கள். அவர்கள் கல்லூரியில் படிக்கும் போது எடுத்தது போலும்!
காலடி ஓசை கேட்டு நிமிர்ந்தவன், இந்து உள்ளறையில் இருந்து வெளியில் வருவதைக் கண்டான். அவன் நின்று கொண்டிருப்பதை கண்டவள்,
"உட்காருங்கள்.. இது உங்க அண்ணியோட காலேஜ் பேர்வெல் டே அன்னைக்கு எடுத்தது..." என்றாள்.
"ஒ! அப்படியா..."
"என்ன சாப்பிடுறீங்க? காபி? டீ? கூல் ட்ரிங்க்ஸ்?"
"இல்லைங்க அதெல்லாம் வேண்டாம்... அண்ணி சொல்லி இருப்பாங்கன்னு நினைக்கிறேன்..." என்று இழுத்தான்.
"ம்ம்ம் அக்கா சொன்னாங்க.... ஆனால் நீங்க பிசினஸ் மேனஜ்மென்ட் கத்துக்க தானே யு எஸ் ல போய் எம்பிஏ படிக்க போனீங்க??"
"ஆமாம்... ஆனால் எங்க படிக்க நேரம்.... எனக்கு ஒரே ஃபேன்ஸ்-ங்க.... படிக்க விட்டா தானே? "
புன்சிரிப்போடு சொன்னவனை நேராக பார்த்தவள்,
"சரி.. அப்புறம் இப்போ என்ன திடீர் ஞானோதயம்?" எனக் கேட்டாள்.
"இல்லைங்க.. இதுக்கு மேல இப்படியே சுத்திட்டு இருந்தால் நல்லா இருக்காது தானே? பொண்ணுங்களுக்கு successful ஆளை தானே பிடிக்கும் அதனால தான் நானும் successful