(Reading time: 11 - 22 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

"ஹலோ கமலா அக்கா... எப்படி போது வேலை எல்லாம்?"

  

"வேலைக்கு என்ன மேடம்.. ரொம்ப நல்லா போகுது..."

  

"நீங்க கடைசியா அனுப்பின அந்த விளக்கு டிசைன் ரொம்ப நல்லா விற்பனையாகுதுன்னு சொன்னாங்க.. கங்கிராட்ஸ்...."

  

"தேங்க்ஸ் மேடம்... இதெல்லாம் இருக்கட்டும்.. நீங்க எப்போ கல்யாணம் செஞ்சு எங்களுக்கு கல்யாண சாப்பாடு போடப் போறீங்க?"

  

வயதில் பெரியவள் என்பதால் கமலாவிற்கு இந்துவிடம் முதலாளி தொழிலாளி என்ற பேதம் இல்லை போலும்! ஆனால் சஞ்சீவிற்கும் இந்து என்ன பதில் சொல்ல போகிறாள் என்பதை கேட்க ஆவலாக இருந்தது.

  

இந்து வழக்கமான அவளின் புன்னகையோடு,

  

"உங்க கிட்ட சொல்லாமல் எதுவும் நடக்காது கவலை படாதீங்க" என்று விளையாட்டு போல் பதில் சொல்லி விட்டு கிளம்பினாள்.

  

சஞ்சீவும், குமாரிடம் நன்றி சொல்லி விட்டு அவளுடன் நடந்தான்.

  

சற்றே திரும்பி அவனை பார்த்தவள்,

  

"ஸோ என்ன சஞ்சீவ்.... எப்படி போச்சு உங்க டைம்?" என்றாள்.

  

"ம்ம்ம்ம்.....உண்மையா சொல்லன்னும்னால் டைம் போனதே தெரியலை.. உங்க அப்பா பத்தி நிறைய கேள்வி பட்டிருக்கேன்... இன்னைக்கு இன்னும் கொஞ்சும் தெரிஞ்சுக்கிட்டேன்..."

  

அமைதியாய் புன்னகைத்தவள், "சரி வாங்க என் ரூம்ல போய் பேசலாம். " என்றாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.