மதியூர் மிஸ்டரீஸ் - 1 - தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 06 - Chillzee Story
This is a Mathiyur Mysteries Novels series episode. Visit Mathiyur Mysteries Novels series page for other current Chillzee Original stories.
அதிர்ச்சியில் இருந்து வெளி வராமலே திரும்பிப் பார்த்தான் அபினவ். அங்கே இருந்தது இன்ஸ்பெக்டர் தென்றல்வாணன்!
நின்ற இடத்திலேயே “சார்!” என்று சல்யூட் அடித்தான் அபினவ்.
“என்ன செய்துட்டு இருக்க அபினவ்?” என்று தேன் விசாரிக்க, அஹல்யாவிடம் கூட ஒன்றும் சொல்லாமல் தென்றல்வாணனின் கார் பக்கம் சென்றான் அபினவ்.
அபினவ் விளையாட வருவான் என்று அங்கேயே நின்றுக் கொண்டிருந்த அருண், அபினவின் கையைப் பிடித்துக் கொண்டான்.
“என்னோட விளையாடுறேன்னு சொன்னீங்க. எங்கே போறீங்க? வாங்க விளையாடலாம்.”
“அருண், நாளைக்கு விளையாடலாம். இன்னைக்கு லேட் ஆச்சுப்பா!”
அபினவ் சிறுவனிடம் தன்மையுடன் விளக்குவதை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் தென்றல்வாணன்.
அருண் அபினவின் கையைப் பிடித்து தடுப்பதை பார்த்து உள்ளே இருந்து வந்தாள் அஹல்யா.
“அருண், அவர் கையை விடு. இதுவரைக்கு விளையாடினதுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு உள்ளே போ. வீட்டுல சீசர் கூட விளையாடு. சீசர் எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டுட்டு இருக்கான் பாரு!”
மிலிட்டரி மேஜர் போல அஹல்யா கட்டளையிட, மறுவாரத்தை பேசாமல், “தேங்க் யூ,” என்று சொல்லி விட்டு நடந்தான் அருண்.
அபினவ் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, இன்ஸ்பெக்டரிடம்,
“குட் ஈவ்னிங் சார்,” என வாழ்த்தினாள் அஹல்யா.