(Reading time: 11 - 21 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

"பை..." என்றும் சொன்னாள் இந்து!

  

சஞ்சீவ் கிளம்பிச் சென்ற பின்பும் கூட இந்துவின் மனம் லேசாகவே இருந்தது... முன் தினம் முதல் இருந்த டென்ஷன் எல்லாம் இருந்த இடம் தெரியாது மறைந்துப் போயிருந்தது. முகத்தில் புன்சிரிப்பு ஒன்று "கம்" போட்டது போல் வந்து ஒட்டிக் கொண்டிருந்தது. அப்போது மட்டும் அல்லாது அன்று முழுவதுமே இந்துவின் முகம் மலர்ச்சியுடனே தான் இருந்தது.

  

🌼🌸❀✿🌷

   

கீதா தன் தோழிகளை சந்திக்க செல்ல தயாராகி கொண்டிருந்தாள். அன்று ஐந்து மணி அளவில் அமைந்தகரையில் இருக்கும் ஷாப்பிங் மாலில் சந்திப்பது என மூவரும் திட்டமிட்டிருந்தனர். வீணா வந்து கீதாவை அழைத்து செல்வதாக சொல்லி இருந்தாள். எப்போதும் போல் சற்று முன்னதாகவே கிளம்பி விட்ட கீதா, காஞ்சனாவை தேடி சென்றாள்.

  

தோட்டத்தில் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தப் படி மெல்ல நடந்துக் கொண்டிருந்த காஞ்சனாவை கண்டவள்,

  

"என்ன அத்தை? ஏதோ யோசனையில இருக்கீங்க போல இருக்கு..." என்று அன்புடன் வினவினாள்.

  

"புதுசா எதுவும் இல்லை கீதா... சஞ்சீவ் மனசை எப்படி மாத்துறதுன்னு தான் யோசிச்சுட்டு இருக்கேன்... கண்மணிய பத்தி நீ என்ன நினைக்கிற?" என்று கேட்டாள் காஞ்சனா.

  

"கண்மணி ரொம்ப நல்ல பொண்ணு அத்தை.... எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு..." என்று உண்மையாகவே தன் மனதில் தோன்றியதை சொன்னாள் கீதா.

  

காஞ்சனாவின் முகம் கொஞ்சம் மலர்ந்தது!

   

"உனக்கும் அவளைப் பிடிச்சிருக்கு... ஆனால் சஞ்சீவுக்கு மட்டும் ஏன் அவளைப் பிடிக்கலை???

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.