(Reading time: 11 - 21 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

  

அதை கவனித்த சேகர்,

   

"உங்களுக்கு தெரியாதா???" என்றான்.

   

"என்ன விஷயம்? இந்துவோட மூடுக்கு என்ன?" என்று அவனிடமே கேட்டாள் வீணா.

  

"வேறென்ன... வழக்கமான விஷயம் தான்... இன்னைக்கு போர்ட் மீட்டிங்ல எப்போவும் போல டிஸ்கஷன், அப்புறம் மோதல்... வேற என்ன..."

  

"ஓ! யாரு? இந்துவும் உங்க ஒய்ஃப் நந்தினியுமா?" என்றாள் கீதா யோசனையோடு.

  

கோபமாக எதுவோ சொல்லத் தொடங்கி விட்டு, மனதை மாற்றிக் கொண்டவளாக உதடுகளை இறுக மூடிக் கொண்டாள் வீணா...

   

அதை கவனித்தப் படி, ஆம் என்று தலை அசைத்தான் சேகர்.

     

"என்ன நடந்தது சேகர்???" என விசாரித்தாள் கீதா.

   

"இன்னைக்கு மீட்டிங் நடந்துட்டு இருந்தப்போ, இந்துக்கு ஏதோ மெசேஜ் வந்துச்சு போல... இந்து அதை எடுத்துப் படிக்கும் போது நந்தினி ஏதோ கேட்க, இந்து கவனிக்கலை... அதுக்கு அப்புறம் என்ன... ஒரே குற்றப் பத்திரிக்கை தான்... எம்டி பொறுப்பா நடந்துக்கலை அப்படி இப்படின்னு..."

  

அதை சொல்லும் போது சேகரின் முகமே எப்படியோ இருந்தது! அவனுக்கும் நடப்பது பிடிக்கவில்லை என்பது வீணா கீதா இருவருக்குமே புரிந்தது!

  

"ரொம்ப பெரிய சண்டை ஆயிடுச்சா சேகர்?" கவலையுடன் கேட்டாள் கீதா.

  

"இல்லை... நானும் அப்படி பெருசா தான் போய் நிக்கும்ன்னு நினைச்சேன்... ஆனால் இந்து என்ன நினைச்சாளோ தெரியலை.... நந்தினியோட தேவை இல்லாத பேச்சை எல்லாம்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.