அவள் கிட்ட சரியாய் பேசவே மாட்டேங்குறான்... எனக்கு தெரிஞ்சு அவன் மனசில காதல் எல்லாம் இல்லை... வேற என்ன விஷயமா இருக்கும்?" என்றாள் காஞ்சனா யோசனையுடன்!
கீதாவின் கண்களில் மெல்லிய சஞ்சலம் எட்டிப் பார்த்தது... எங்கே அவளிடமே சஞ்சீவின் மனதை மாற்ற முயல சொல்லிவிடுவார்களோ என்ற கவலையுடனே,
"அதை தான் சஞ்சீவே சொன்னாரே அத்தை... அவர் கண்மணியை தங்கச்சியா நினைக்குறாராமே..." என்றாள் கீதா.
"ம்ம்ம்ம்... இன்னைக்கு உன் ஃபிரெண்ட் இந்துவோட அம்மா அர்ச்சனா ஃபோன் செஞ்சாங்க... சஞ்சீவுக்கு இப்போ கலயாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்கீங்களான்னு கேட்டாங்க...." என்றபடி மருமகளின் முகத்தைப் பார்த்தார் காஞ்சனா.
கீதாவிற்கும் இது புது 'நியூஸ்' தான்! அவளின் முகத்தில் கேள்வியும், திகைப்பும் ஒன்றாக தோன்றியது...
மருமகளின் திகைப்பை பார்த்து காஞ்சனாவின் முகத்தில் புன்னகை அரும்பியது.
"என்ன ஆச்சு கீதா???" என்று மருமகளிடமே விசாரித்தாள்.
"இல்லை அத்தை... அர்ச்சனா ஆன்ட்டி எதுக்கு இதைப் பத்தி கேட்கனும்ன்னு புரியலை..." என்று சொல்லி ஒருவாறு சமாளிக்க முயன்றாள் கீதா.
"ஓ, அதுவா... அர்ச்சனாக்கு தெரிஞ்சவங்க யாரோ கேட்டாங்கன்னு சொன்னாங்க..." என காஞ்சனா சொன்னதும் தான் கீதாவால் இயல்பாக மூச்சே விட முடிந்தது.
"ஓஹோ... நீங்க என்ன சொன்னீங்க அத்தை?"
"நான் வேற என்ன சொல்லுவேன்... என் தம்பி மகளை தான் அவனுக்கு கல்யாணாம் பண்ணி வைக்கலாம்னு இருக்கேன்னு சொன்னேன்..."