இக்னோர் பண்ணிட்டு, நந்தினி கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னாள். அதனால் எப்படியோ பெரிய குழாய் அடி சண்டையில இருந்து நாங்க எல்லோரும் தப்பிச்சோம்..." என்றான் சேகர் ஒரு 'பாயிஷ்' புன்னகையுடன்.
அவன் நடந்ததை சொல்லி முடித்த விதத்தில் மற்ற இருவருக்கும் கூட சிரிப்பு வந்தது.
"என்ன சேகர், எஸ் எ இண்டஸ்ட்ரீஸ் எதோ பெரிய கம்பனின்னு நாங்க எல்லாம் நினைச்சுட்டு இருக்கோம்... நீங்க குழாய் அடி சண்டையோட உங்க போர்டு மீட்டிங்க கம்பேர் பண்றீங்க...???" என்றாள் கீதா கிண்டலாக!
"வேற என்ன செய்ய சொல்லுங்க... இவங்க ரெண்டு பேர் சண்டையும் என்னைக்கு முடியுமோ தெரியலை..." சேகர் பேசி முடிக்கும் முன் அவன் செல் ஃபோன் அலற தொடங்கியது. எடுத்து நம்பரை பார்த்தவன்,
"சரி, நான் கிளம்புறேன்... அப்புறம் பார்ப்போம்..." என்றபடி அங்கிருந்து நகர்ந்தான்.
"மகாராணி நந்தினி ஃபோன் பண்றாங்க போல இருக்கு..." என்றாள் வீணா.
"ம்ம்ம்ம்... என்ன பேசினாலும்... என்ன சொன்னாலும்.... நந்தினி கிட்ட இருந்து ஃபோன் வந்த உடனே எப்படி டக்குன்னு கிளம்புறார் பார்த்தீயா?" என்றாள் கீதா!
"பின்ன, அப்புறம் அவருக்கு தானே டோஸ் விழும்...!!! ப்ச்... அந்த நந்தினி எப்படியாவது போகட்டும்...!!! இந்து இன்னைக்கும் மூட் அவுட்ல வரப் போறாளா? ச்சே... கடுப்பா இருக்கு அக்கா... எப்போ தான் நாம பழைய இந்துவைப் பார்க்குறது..." என்றாள் வீணா அலுப்புடன்!
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தொடரும்...