"ஓ! சரி அத்தை..." என்ற கீதா பேச்சை மாற்ற,
"கண்மணியும் கலாவும் எப்போ வருவாங்கன்னு ஏதாவது சொன்னாங்களா அத்தை?" என்றுக் கேட்டாள்.
"இல்லைம்மா... சும்மா ஷாப்பிங் போறேன்னு தான் சொல்லிட்டுப் போனாங்க... நீ எப்படி போக போற??? காரு வீட்டுல இல்லையே???"
"வீணா வரேன்னு சொல்லி இருக்கா அத்தை..."
"சரிம்மா... சீக்கிரம் வர முடியுமா பார்..."
"சரி அத்தை... கண்மணி வேற வீட்டுல இல்லையே... உங்களுக்கும் போர் அடிக்கும் தானே? நான் வேணும்னா இன்னைக்கு இந்த ப்ரோகிராமை கான்செல் பண்ணிடவா?"
வெறும் வாய் வார்த்தைக்காக அல்லாமல் கீதா நிஜமாகவே கேட்பதை உணர்ந்ததால், வாஞ்சையோடு அவள் கைகளைப் பற்றி,
"வேண்டாம்மா நீ போயிட்டு வா... எனக்கு ஒரு பொண்ணு இல்லைன்ற குறை இப்போ உன்னால போய்டுச்சு... ஆனால், நீ என்னை மாமியாரா நினைச்சு விலக்கி வைக்காமல் அம்மாவா நினைச்சால் இன்னும் சந்தோஷப்படுவேன்..." என்றாள் காஞ்சனா.
"என்ன அத்தை இது... எனக்கு நீங்களும் ஒரு அம்மா மாதிரி தான்... நீங்களும் என்னோட இப்போ வர்றீங்களா?"
"அப்படி நானும் வந்தா, அப்புறம் எப்படி ராஜீவை பத்தியும், என்னைப் பத்தியும் மூணு பேரும் பேசுவீங்க?" என்று புன்னகையோடு கேட்டார் காஞ்சனா.
"ச்சே ச்சே... உங்களை பத்தி எல்லாம் எதுவும் நாங்க எதுவும் பேச மாட்டோம் அத்தை..." என்று