(Reading time: 48 - 96 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பக்கம் என்றால் மறுபக்கம் அவன் நாய் வளர்க்கவே ஒரு பெரிய இடத்தை வளைத்து வைத்திருந்தான். அவன் வீட்டில் இருக்கும் நேரத்தை விட நாய்களுடன் இருக்கும் நேரமே அதிகம் என்பதால் அது அறிந்தே டிரைவரும் காரை அவ்விடம் நிப்பாட்டினார்.

  

சண்முகத்திற்கு கொம்பனை நன்றாக தெரியும், அதனால் கார் நின்றதும் வேகமாக காரை விட்டு இறங்கினார், காவேரியும் சிறிதும் பதட்டமின்றி அமைதியாக இறங்கி நின்றாள்.

  

டிரைவரோ அது நாள் வரை சண்முகத்திற்கு வேலையாளாக இருந்தவன், சட்டென தன் விசுவாசத்தை காட்ட எண்ணி கொம்பனை நோக்கி ஓடினான். அவன் செய்வதைக் கண்டு வியந்த காவேரியோ தன் தந்தையைக் கண்டாள். அவரோ உக்கிரமாக இருந்தார் எதையோ தேடிக் கொண்டிருந்தார்

  

”அப்பா என்ன தேடறீங்க”

  

”அருவாளை தேடறேன் இன்னிக்கு ஒரே வெட்டு, அவன் தலையை வெட்டி எறியப்போறேன்” என சொல்லிக் கொண்டிருக்க அவளுக்கு திக்கென்றது. அவருக்கு அருவாள் கிடைப்பதற்குள் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்திட வேண்டும் என எண்ணிய காவேரி டிரைவர் ஓடிய பாதையில் ஓடினாள்.

  

மணமகள் கோலத்தில் அவள் ஓடிவருவதை அங்கு இருந்த வேலையாட்கள் கண்டு வியந்தார்கள். சுற்றிலும் வேட்டை நாய்கள், வயது வாரியாக இனம் வாரியாக இருந்தது, அவைகளைப் பார்த்துக் கொள்ள அத்தனை வேலையாட்களை வைத்திருந்தான் கொம்பன், முதல் முறையாக ஒரு பெண் ஓடிவருவதைக் கண்டு நாய்களே மிரண்டு குரைக்க தொடங்கியது, அதன் சத்தம் கேட்டு காவேரிக்கு பயம் வந்தது, ஓடியவள் நின்று தன்னை சுற்றிப் பார்த்தாள் ஒரே நாய்கள் கூட்டம் ஒவ்வொன்றும் அவள் உயரத்துக்கு இருந்தது, நன்றாக வளர்ந்த காரணத்தால் ஒவ்வொன்றையும் பார்க்க பார்க்க அவள் கைகால் உதறியது. எப்படியோ அருவாளை கண்டுபிடித்து பின்னாடியே வந்த சண்முகத்தையும் அந்த நாய்கள் விடவில்லை, குரைத்தது,

  

அதன் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள் அங்கு சண்முகமும் நாய்களின் சத்தத்தால்

One comment

  • இது என்னமா புது சீனா இருக்குது. கண்டிப்பா flashback இருக்கும்.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.