மிரண்டுப் போயிருந்தார், கையில் அருவாளுடன் இருந்தவரைக்கண்ட காவேரிக்கு திக்கென்றது. அந்நேரம் பயம் விலகி தந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவே மீண்டும் தன் ஓட்டத்தை தொடர்ந்தாள், அனைத்து நாய்களும் கயிறால் கட்டப்பட்டிருந்தது, இருந்தாலும் அவள் ஓடும் பாதையில் அவைகளும் எகிறியது, அவற்றை ஆட்கள் அடக்க முயற்சி செய்தார்கள், எங்கே நாய் தன்னை கடித்துவிடுமோ தன் மீது பாய்ந்துவிடுமோ என பயந்தபடியே ஒவ்வொரு நாயிடமும் சிக்காமல் தப்பித்து அப்படி இப்படி என ஓடினாள். சண்முகமும் அதே போல ஓடி வந்தார் என்ன சற்று நிதானமாக வந்தார். அதற்குள் காவேரி கொம்பன் இருக்குமிடம் வந்து சேர்ந்தாள். அதற்குள் அவளின் கார் டிரைவர் கொம்பன் முன்பு கைகட்டி நின்றபடி நடந்தவற்றை எவ்வளவு சுருக்கமாக சொல்ல முடியுமோ அவ்வளவு சுருக்கமாக சொல்லிக் கொண்டிருந்தான்
”அண்ணா உங்களை வெட்டறதுக்கு உங்க மாமன் வராருண்ணா”
”மாமனா எந்த மாமன்”
”சண்முகம் அண்ணா”
”ஆஆஆ அவர் ஊர்லயா இருக்காரு இல்லையே 3 நாள் ஆச்சி அவரை பார்த்து”
”அவர் பொண்ணு கல்யாணத்துக்காக வெளியூர் போயிட்டு இப்பதான் வராரு”
”ஓ அப்படியா கல்யாணம் நல்லபடியா நடந்ததா, எந்த பிரச்சனையும் இல்லையே” என கேட்க டிரைவர் அரண்டான்
”அண்ணா நீயா இப்படி பேசறது”
”ஏன் என்னாச்சி”
”என்ன ஆச்சா உன் முறைப்பொண்ணுக்கு கல்யாணம், உனக்கு கஷ்டமாயில்லையா”