”பெரியவனா ஓ வயசுல சொல்றியா அதுக்காகலாம் உன்னை நான் மாமான்னு கூப்பிட முடியாது”
”ஊர்காரங்களுக்கு பல நல்லது செய்திருக்கேன் அதுக்காகவாவது என்னை பேர் வைச்சி கூப்பிடாத”
”முடியாது கொம்பா”
”சொன்னாக்கேளு தயவுசெஞ்சி கெஞ்சிக் கேட்டுக்கறேன் பேர் வைச்சி கூப்பிடாத” என சொல்ல அவளோ வேண்டுமென்றே சத்தமாக கொம்பா” என அழைக்க அவனுக்கு சலிப்பே வந்தது
”வந்து வாய்ச்சா பாரு எனக்குன்னு முறைப்பொண்ணு ஒருத்தி சே”
”என்ன கொம்பா இதுக்கே சலிச்சிக்கிட்டா எப்படி, இன்னும் நிறைய இருக்கு” என சொல்லிய நேரம் கொம்பனின் தாய் தந்தை பால் பழத்துடன் வரவும் அதைக் கண்ட கொம்பன்
”இது ஒண்ணுதான் இங்க குறை” என அலுப்பாக சொல்ல காவேரியோ
”பாருங்க அத்தை பாருங்க மாமா எப்படியெல்லாம் அலுத்துக்கறாருன்னு” என சொல்ல அவர்களோ ஒரு சேர கொம்பனை கோபமாக முறைக்க முதல் முறையாக தாய் தந்தையின் கோப பார்வையைக் கண்டு நடுநடுங்கிப் போனான் கொம்பன்
”அம்மா அப்பா இல்லை நான் சும்மா அது வந்து” என சமாளிக்க முயன்றான் முடியவில்லை. அவர்களோ கையில் இருந்த பாலும் பழத்தையும் இவர்கள் கைகளில் தந்தார்கள் முறைப்படி பால் பழம் சம்பிரதாயம் நடந்தது. அதில் காவேரியோ வேண்டுமென்றே அவனிடம்
”ஆஆ வாய் திற” என சொல்ல அவளோ