அவள்தானே அருவாளை கழுத்துல வைச்சி மிரட்டி என்னை தாலி கட்ட வைச்சா”
”எது எப்படியோ கல்யாணம் ஆயிடுச்சில்ல, இனிமேல கல்லானாலும் அவளைதான் நீ காதலிக்கனும், புல்லானாலும் அவளைதான் நீ பார்த்துக்கனும், பொறுப்பா இருக்க கத்துக்க, ஒரு நல்ல புருஷன்னு பேர் எடுக்கனும், புருஷலட்சணத்தோட வாழப்பாரு ஒவ்வொரு முறையும் நீ செய்ற தப்புக்கு அவள் முன்னாடி எங்களால தலைகுனிஞ்சி நிக்க முடியாது, அவள் உன்னை குறை சொல்ற மாதிரி வேற எந்த காரியமும் செய்திடாத, அவள்கூட பக்குவமா நடந்துக்க தேவையில்லாம வீட்டுக்குள்ள பிரச்சனை வரவேணாம் புரியுதா” என அதட்ட அவனோ குழம்பி தலையை சரியென ஆட்டிவைத்தான்
”சரி சரி போ போய் அவளுக்கு ஜுஸ் கொடு, அப்படியே வேற என்ன வேணும் ஏது வேணும்னு கேளு, அவள் ஏதாவது கேட்டா செய் ஒதுங்கி நிக்காத, அதுக்காக அவள் மேல போய் பாஞ்சிடாத, சின்ன பொண்ணுடா மென்மையா நடந்துக்கனும் சரியா”
”ப்ச் சரி சரி வழி விடுங்க எல்லாம் என் நேரம்“
”இப்படி புலம்பாதடா எப்ப உனக்கு கல்யாணம் ஆச்சோ அப்பவே உனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சி, அவளை கண்கலங்காம பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு”
”அம்மா என் கண்ணுதான் கலங்குது, அவளுக்கென்ன உலக்கையாட்டம் இருக்கா, அவள்கூட போய் என்னை வாழ சொல்றீங்க கிளியை பெத்து குரங்கு கிட்ட கொடுத்த மாதிரியிருக்கு”
”அடிவாங்காத கொம்பா யாராச்சும் இதைக் கேட்டா என்ன நினைப்பாங்க, இனிமேல இதுபோல பேசி வைக்காத, பொண்டாட்டின்னா அப்படிதான் இருப்பாங்க, நீதான் கொஞ்சம் இறங்கிப் போகனும், சில நேரங்கள்ல கண் இருந்தும் குருடனா, காது இருந்தும் செவிடனா, வாய் இருந்தும் ஊமையா நீ இருந்தேன்னு வையேன், உன் குடும்ப வாழக்கையில எந்த பிரச்சனையும் வராது”
”ஷ்ஷ் என்னால முடியலை, அவளுக்கு சொல்ல வேண்டியதெல்லாம் எனக்கு