”அப்ப இதை என்ன செய்றது“
”நீயே குடி”
“இது உன்னோட எச்சி நான் எப்படி குடிக்கறது”
”ஏன் கல்யாணம் ஆகிடுச்சில்ல உனக்கும் எனக்கும் அப்பறம் என்ன எச்சிலை எல்லாம் பார்க்கற குடும்பம் நடத்தறப்ப கூட எச்சில் பார்ப்பியா இப்படியிருந்தா எப்படி வாழமுடியும்”
”ஆமா அப்படியே உன்கூட நான் வாழ்ந்துடுவேனா ஏதோ உனக்கு நடந்த அநீதிக்கு தண்டனையா உன் கழுத்தில தாலி கட்டினேன்”
”நீயா எங்க கட்டின நானா கட்ட வைச்சேன்”
”ஆமாம் தாயே நீதான் கட்டவைச்ச அதுவே பெரிசு, இதுல உன்கூடலாம் குடும்பம் நடத்துவேன்னு கனவு கூட காணாத”
”ஓ அப்படியா சரி அந்த கதையை அப்புறம் பார்த்துக்கலாம், போ போய் ஆப்பிள் ஜுஸ் கொண்டு வா போ” என சொல்ல அவனோ வெறுப்பாக ஜுஸ் டம்ளருடன் வெளியேறினான். எதிர்பட்ட கணக்குப் பிள்ளையோ நக்கலாக சிரிக்க
”உன்னை கொல்ல போறேன் பாரு”
”ஏன் அண்ணி ஜுஸ் சாப்பிடலை போல சரியா ஜுஸ் போட்டு கொடுக்கலையா நீ”
”ஆமா நான் என்ன ஜுஸ் கடையாடா நடத்தறேன், ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி ஜுஸ் போட்டு கொண்டு போய கொடுத்தா வேணாம்ங்கறா”
”ஏனாம்”