(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

பூனையும் பால் குடிச்சாங்க, இதுல நேரத்துக்கு கடவுள் வழிபாடு செய்ய முடியாம போனதால பசுமாட்டை பார்த்துக்கறது ஒரு பொண்ணை வேலைக்கு வைச்சான், அந்த பொண்ணும் பசுமாட்டையும் அந்த வீட்டையும் நல்லபடியா பார்த்துக்கிச்சி அவனோட பிரச்சனையும் படிப்படியா குறைஞ்சது அப்புறம் ஒரு வருஷம் கழிச்சி பார்த்தா”

  

”பார்த்தா”

  

”அவன் அந்த பொண்ணை கல்யாணமே பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்தி ஒரு குழந்தையும் பெத்துக்கிட்டு சம்சாரி வாழ்க்கையை வாழ ஆரம்பிச்சிட்டான், சந்நியாசி வாழ்க்கையை விட சம்சாரி வாழ்க்கைதான் சிறந்ததுன்னு அவன் புரிஞ்சிக்கிட்டான் அதே போல நீயும் புரிஞ்சிக்க நண்பா”

  

”டேய் இதெல்லாம் ஒரு கதையாடா பாவி எனக்கு ஏன்டா இதை சொன்ன”

  

”உனக்கு ஏத்த கதை இது, அதனால சொன்னேன் நண்பா நீயே ஒரு நாள் சொல்வ பாரு சந்நியாசி வாழ்க்கையை விட சம்சாரி வாழ்க்கைதான் நல்லாயிருக்குன்னு”

  

”சத்தியமா நான் சொல்ல மாட்டேன், அதுக்கு வாய்ப்பே இல்லை”

  

”இப்படி சொன்னவனுங்க நிறைய பேரை நான் பார்த்துட்டேன் கடைசியில மாறினவங்க அவனுங்கதான் அந்த வரிசையில நீயும் மாறிடுவ நண்பா”

  

”உனக்கு அந்த ராட்சஸி எவ்வளவோ மேல்” என புலம்ப அந்நேரம் சண்முகம் வந்தார் மகளை தேடி அதைக் கண்டவன் அவரைத் தடுத்தான்

  

”மாமா எங்க போறீங்க“

  

”என் மகளை பார்க்க”

  

”அவள் தூங்கறா போய் எழுப்பாதீங்க”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.