(Reading time: 30 - 59 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”அவளுக்கு ஆரஞ்சு பிடிக்காதாம் ஆப்பிள் ஜுஸ் கொண்டு வான்னு அதட்டறா”

  

”அடடா என்ன கொம்பா இது என்ன ஜுஸ் வேணும்னு ஒரு வார்த்தை கேட்டுக்க கூடாதா, பாரு இப்ப என்ன ஆச்சின்னு இனியாவது எல்லாத்தையும் கேட்டு செய்ப்பா, இது என்ன உன் வீடா உன் விருப்பப்படி எல்லாரும் நடந்துக்கறதுக்கு, இது நீ வாழ வந்த வீடு, இங்க இருக்கறவங்களுக்கு என்ன பிடிக்கும் ஏது பிடிக்கும்னு தெரிஞ்சிக்கறது ரொம்ப முக்கியம்”

  

”டேய் போதும்டா முடியலை தலையே வலிக்குது, பசி வேற ஷ்ஷ்” என புலம்பியபடியே கையில் இருந்த ஜுஸை கடகடவென குடித்துவிட்டு ஏப்பம் விட்டான்.

  

”சரி சரி போ கொம்பா ஆப்பிள் ஜுஸ் போட்டு கொண்டு போய் கொடு போ”

  

”சே எல்லாம் என் நேரம்”

  

”எல்லாம் நல்ல நேரம்தான் போப்பா போ” என சொல்ல அவனோ வேண்டா வெறுப்பாக ஆப்பிள் ஜுஸ் போட்டு கொண்டு வந்து அவளை பார்க்க அவளோ அதற்குள் உறங்கிவிட்டிருந்தாள்

  

அவளது தோளை போட்டு உலுக்கி எடுத்து எழுப்பி விட்டான் கொம்பன் அவளோ தூக்ககலக்கத்தில்

  

”அறிவிருக்கா உனக்கு இப்படியா தூங்கறவங்களை எழுப்பறது என்னத்தை சொல்லிக்கொடுத்து உன்னை வளர்த்தாங்களோ சே உன்னால என் தூக்கம் போச்சி”

  

”ஜுஸ் வேணும்னு கேட்டல்ல இந்தா குடி அதுக்குள்ள என்ன தூக்கம் வேண்டியிருக்கு உனக்கு”

  

”ஏன் சொல்ல மாட்ட, என் கல்யாணம் நடக்குமா நடக்காதாங்கற பயத்தில நேத்து நைட் நான் தூங்கவே இல்லை தெரியுமா, அசதியில தூங்கிட்டேன் அதுக்கு போய் இந்த

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.