சரிபண்ணிக்கிட்டே இருந்தா நாம எப்ப வாழறது, ஏன் நமக்கும் பிரச்சனை வருது அதை என்ன இந்த ஊர்க்காரங்களா தீர்த்து வைக்கறாங்க, நம்ம பிரச்சனையை நாம தீர்த்துக்கறது போல ஊர்க்காரங்களும் அவங்க அவங்க பிரச்சனையை தீர்த்துக்கட்டும், இனிமேல யாரும் உங்ககிட்ட வந்து உதவிங்கற பேர்ல உங்களை அடிதடி பிரச்சனையில இறக்க கூடாது இறக்கவும் விடமாட்டேன்“
”ப்ச் அவங்க பாவம் அவங்களால முடியாம போனதாலதானே என்னை தேடி வந்தாங்க அந்த தகராறு செய்றவங்ககிட்ட போய் பேசறேன் அதுக்கே அவங்க ஒதுங்கிடுவாங்க”
”ஒதுங்கலைன்னா”
”ஒதுங்கலைன்னா ஒதுங்க வைக்க வேண்டியதுதான் நாலு தட்டு தட்டினா பிரச்சனை முடிஞ்சது”
”நீங்க என்ன அடியாளா இல்லை கூலிப்படையை சேர்ந்தவரா”
”தேவையில்லாத வார்த்தைகளை கொட்டாத”
”பின்ன கொம்பன்னா அப்படி இப்படின்னு அளந்துவிட்டாங்க கடைசியிலதான் தெரியுது கொம்பன்னா அடிதடி செய்ற அடியாள்ன்னு”
”அப்படியெல்லாம் இல்லை இது எல்லாம் சின்ன உதவிதானே“
”போதும் அடிதடியில இறங்கிதான் இந்த பிரச்சனையை சரிசெய்யனுமா தேவையில்லை அவங்க பிரச்சனையை போலீஸ்கிட்ட போய் சொல்லி சரியாக்கட்டும்” என சொல்ல அதற்கு ஊர்க்காரன் ஒருவன்
”அம்மா போலீஸ்கிட்ட போனா பிரச்சனை சரியாகாது பணம் செலவாகும் உடனே முடிக்க மாட்டாங்க, நாள் தள்ளுவாங்க அதுவரைக்கும் எங்க நிலத்தில பயிர் எல்லாம் நாசமாயிடும்மா” என சொல்ல அவளோ