முடியாது, அதோட ஜானகிக்கு துரோகம் செய்ய என்னால முடியாது“
”அப்போ நீ இந்த வீட்டுக்கு மருமகளாதான் ஆகப் போறியா”
”ஆமாம்“
”அப்ப நான் என் பையனுக்கு வேற பொண்ணைதான் பார்க்கனும், அவன்கூட ஆசைப்பட்டான், உன்னைப் பார்த்ததும் அவனுக்கு பிடிச்சி போச்சாம், எப்படியாவது ஜானகியை வேங்கையன் பக்கம் அனுப்பிட்டு உன்னை கைபிடிக்கலாம்னு சொன்னான்”
”இது எப்போ சொன்னாரு”
”நேத்து ராத்திரி”
“அடடா கால தாமதம் ஆயிடுச்சி நான் இந்த வீட்டு மருமகளா பிக்ஸ் ஆயிட்டேன், இனி என்னால மாற முடியாது, வேணும்னா ஜானகியை நீங்க உங்களுக்கு ஏத்த மாதிரி மாத்தப்பாருங்களேன், அவள்கிட்டயும் நிறைய சொத்திருக்குல்ல அந்த சொத்துக்காகவாவது அவளை ஏத்துக்கலாம்ல”
”அந்த எண்ணமும் இருந்தது உன்னை பார்க்காத வரைக்கும், எப்ப உன்னை என் புள்ளை பார்த்தானோ அப்பவே அவன் மனசு மாறிடுச்சி“
”வேங்கையனை பகைச்சிக்க பயமா இருந்தா சொல்லுங்க, நானே வேங்கையன்கிட்ட பேசி ஜானகியையும் மூர்த்தியையும் சேர்த்து வைச்சிடறேன்”
”அதெல்லாம் வேணாம், வேங்கையன் எப்பவோ எங்க வீட்ல வந்து பேசிட்டான், ஜானகியை ஏத்துக்க சொல்லி நாங்கதான் வேணாம்னு சொன்னோம்”
”ஏன்”
”அட அவள் குணமே சரியில்லை வீட்டு மானத்தை வீதிக்கு கொண்டு வந்தவ, நாளைக்கு எங்க