”டேய் நிறுத்துடா நானே புலம்பறேன், நீ என்னடான்னா அவளை பாராட்டி புகழ் பாடற”
”கொம்பா வல்லவனுக்கு வல்லவன் நாட்டுல உண்டு அதை நேரடியாவே பார்த்துட்டேனா அதான் சரி விடு இப்ப என்ன கோபத்தில பொங்கற”
”எப்படிடா எப்படி“
“எது எப்படி”
”காவேரி எப்படி என் திட்டத்தை தெரிஞ்சிக்கிட்டா”
”அதெல்லாம் இல்லை கொம்பா அவளுக்கு ஒண்ணுமே தெரியாது, எங்க நீ அவளை தோற்கடிச்சிடுவியோன்னு பயந்து உன் திட்டத்தை தெரிஞ்ச மாதிரியும் தான் இங்க வந்ததே புது திட்டம் மாதிரியும் பேசியிருக்கா, அதை நீ நம்பியிருக்க அவ்ளோதான்”
”அப்படியா சொல்ற“
”ஆமாம் நண்பா நான்தான் அவள் முகத்தை பார்த்தேனே உன் மேல அவளுக்கு காதல் வந்திருக்கு உன்னை காதலா பார்த்தா நண்பா”
”அப்படி ஒண்ணும் தெரியலையே”
”சரி நான் ஒரு கேள்வி கேட்கறேன் பதில் சொல்லு உண்மையாவே நீ அவளை பழிவாங்கனும்ங்கற எண்ணத்திலதான் மன்னிப்பெல்லாம் கேட்டு இங்க கூட்டிட்டு வந்தியா”
”மன்னிப்பு கேட்டது அவளுக்கு நடந்த அவமானத்துக்காக நான் அவளை இங்க கூட்டிட்டு வரலை, எங்கம்மா அவளை கூட்டிட்டு வந்தாங்க நானா அவளை கூட்டிட்டு வந்தேன் அப்புறம் அவளை பழிவாங்கனும்ங்கற ஆசையெல்லாம் எனக்கில்லை, ஆனா என்னை அவள் ரொம்ப கஷ்டப்படுத்திட்டா அதுக்காக அவளை சும்மா கஷ்டப்படுத்தி