”அய்யே எதுக்கு இப்படி முறைக்கற, நான் என்ன உனக்கு பிடிச்ச கலரா கேட்டேன், உன் தோழிக்கு என்ன கலர் பிடிக்கும்னுதானே கேட்கறேன்”
”தெரியாது“ என்றாள் வேண்டுமென்றே
”தெரியாதா நம்பற மாதிரியா இருக்கு, நீயும் மாதவியும் உயிர் தோழிகள் ஆச்சே கண்டிப்பா அவளை பத்தி உனக்கு தெரிஞ்சிருக்குமே”
“தெரியும் ஆனா உங்ககிட்ட சொல்ல மாட்டேன்”
”ஏன்”
”இப்ப சொன்னா என்ன செய்வீங்க”
”அவளுக்கு பிடிச்ச கலர்ல நான் புடவை எடுத்து வைப்பேன் அவளைப் பார்க்கறப்ப தருவேன் பாரு அதுக்குதான்” என சொல்ல கண்ணகி உடனே தன் அறைக்கு விறுவிறுவென சென்றுவிட கோவலன் கலகலவென சிரித்தான்
”இந்த பொண்ணுக்கு பாரேன் என்னம்மா கோபம் வருது, அவ்ளோ விரும்பறாளா என்னை” என நினைத்தான். அதற்குள் பரபரவென திரும்பி வந்தாள் கண்ணகி, கையில் மாதவிக்காக கோவலன் தந்த புடவையுடன்
அந்த புடவையைக்கண்டதும் கோவலனோ
”என்னது இது புதுப்புடவையா எப்ப எடுத்த” என கேட்க அவளோ முறைத்தாள்
”எதுக்கு முறைக்கற”
”இதைகூடவா நீங்க மறந்துட்டீங்க”