”பிரச்சனை நடந்த இடத்துக்கு என்னை கூட்டிட்டுப் போறியா”
”ஊட்டிக்கா”
”ஆமாம்”
”சரி வா போலாம்” என அவளை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு சென்றாள் மாதவி
எங்கு சம்பவம் நடந்ததோ அவ்விடத்தில் இரு பெண்களும் ஆராய்ந்தார்கள், ஏதாவது ஆதாரம் கிடைக்குமா என பார்த்தார்கள் ஆனால் எதுவும் கிடைக்கவில்லை, மாதவி கூட நம்பிக்கையை இழந்திருந்தாள் ஆனால் கண்ணகி தைரியமாக இருந்தாள்.
”கண்ணகி எதுவும் கிடைக்கலையே நாளைக்கு கோர்ட்டுக்கு போகனும் ஆதாரம் இல்லைன்னா கோவலனுக்கு தண்டனை தந்துடுவாங்கடி”
”அப்படி எதுவும் நடக்காது நீ ஒண்ணு பண்ணு இப்பவே ஊருக்கு போ”
”நீ வரலையா”
”இல்லை”
”வராம என்ன செய்யப் போற”
”ஆதாரத்தை தேடப்போறேன்”
“நானும் இருக்கேனே”
“ப்ச் வேணாம் நீ போய் பாரு, ஆதாரம் கிடைக்கலைன்னாலும் சரி வக்கீல்கிட்ட சொல்லி கால அவகாசம் கேட்க சொல்லு, அதுக்குள்ள ஏதாவது செய்றேன்”