”அவங்களே நடந்ததை சொன்னாங்க”
”அவங்க சொன்னதை அப்படியே நீங்க நம்பிட்டீங்களா”
”ஆமாம் மேடம் கொலையும் பண்ணிட்டு சரண்டரும் ஆகியிருக்காங்க, இவங்களை சும்மா விடக்கூடாது மேடம் கண்டிப்பா இவங்களுக்கு தண்டனை தந்தே ஆகனும்”
”அடடா ஏன் இப்படி கோபத்தில வெடிக்கறீங்க ரிலாக்ஸா இருங்கன்னு சொன்னேன்ல” என்றதும் மதியழகி தனது கோபத்தை குறைக்கலானாள்.
”சரியான ஆதாரம் இல்லை, சாட்சியும் இல்லை, சரண்டர் ஆனதால அவங்களுக்கு என்னால தண்டனை அளிக்க முடியாது, முதல்ல என்ன காரணம்னு தெரிஞ்சிக்கனும், ஒரு பொண்ணு தன் கணவரை கொல்ற அளவுக்கு துணியறாள்னா அப்போ அவளோட கணவன் எப்படிப்பட்டவனா இருக்கனும் ம்ம் விசயம் இல்லாம எதுக்காக அவள் கொல்லனும், இதை பத்தி எல்லாம் விசாரிச்சீங்களா” என ஜட்ஜ் கேட்க மதியழகி திருதிருவென விழித்தாள்
”போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் என்ன சொல்லுது கொலைன்னு சொல்லுதா இல்லை தற்கொலைன்னு சொல்லுதா”
”இன்னும் ரிப்போர்ட் வரலை மேடம்”
”வராமலே இங்க கூட்டிட்டு வந்துட்டீங்களா”
”அந்த பொண்ணே செய்த தப்பை ஒத்துக்கிட்டப்போ வேற எதுக்கும் அவசியம் இருக்காதுன்னு நினைச்சேன் மேடம்” என தெளிவாக மதியழகி சொல்ல ஜட்ஜோ
”இதப்பாருங்க உங்களோட கணிப்பை வைச்சி என்னால தீர்ப்பு எழுத முடியாது சரியா, முதல்ல அந்த பொண்ணுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியனும், எதனால அவள் தன் கணவனை கொன்னாள்ன்னும் தெரியனும், அதுக்கு அப்புறம்தான் யார் மேல தப்புன்னு தெரிஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி தண்டனை தரமுடியும், நீங்க சொன்னதுக்காகலாம் என்னால தண்டனை