சொன்னாங்க“
”அதுக்காக நீங்க என்னை சந்தேகப்படறீங்களா இது அநியாயம்ங்க”
“நியாயம் அநியாயம்லாம் அப்புறம் பேசிக்கலாம், உண்மையைச் சொல்லு அப்பாவோட அறைக்கு நீ எதுக்காக போன”
”அவரை பார்க்கப் போனேன்”
”அதான் எதுக்கு”
”அவரும் உங்க தாத்தாவும் பேசிக்கிட்டு இருந்தப்ப, உங்கப்பா முகம் சுருங்கிப் போச்சி, அவர் கண்கலங்கினார் தாத்தா அவரை ரொம்ப திட்டிட்டார் போல இருக்கு, சரி அவரோட ஆறுதலா இரண்டு வார்த்தை பேசலாமேன்னு அவரை பார்க்கப் போனேன் ஆனா, அங்க அவரு தூங்கிகிட்டு இருந்தாரா அதனால அவரை நான் தொந்தரவு செய்யாம வந்துட்டேன்”
”இல்லையே நீ அவர் அறைக்குப் போய் 1 மணி நேரம் கழிச்சிதான் வெளிய வந்தேன்னு தாத்தா சொன்னாரு”
”சத்தியமா இல்லைங்க நான் போய் பார்த்தேன், அவர் தூங்கிகிட்டு இருந்தாரா அதனால உடனே திரும்பி வந்துட்டேன், எப்படியும் 5 நிமிஷம்கூட ஆயிருக்காதுங்க“
“அப்புறம் எதுக்காக தாத்தா உன் மேல சந்தேகப்படனும்”
”அவருக்கு என்னை பிடிக்கலை, எப்படியாவது என்னை இங்கிருந்து விரட்டனும்னு முடிவோட இருந்தாரு, அந்தச் சமயம் பார்த்து உங்கப்பா தற்கொலை செய்துக்கிட்டாரு, அதையும் என்னையும் சேர்த்து முடிச்சிப் போட்டு சந்தேகத்தை கிளப்பியிருக்காரு”
”நம்பற மாதிரியில்லையே நாச்சியா”
”உங்கப்பா சாவுல எனக்கென்ன லாபம் இருக்கு சொல்லுங்க, நியாயமா பார்த்தா நீங்கதான்