”அதெல்லாம் வேணாம் யாரை மறக்கனும்னு இந்த கல்யாணத்தை செய்துக்கிட்டோமோ அவங்களையே எப்பவும் நினைச்சிக்கிட்டு இருக்கற மாதிரி பெயர் வைக்கனுமா எனக்குப் பிடிக்கலை ஹரிணி”
என்றான் கோபமாக
”ஓ அப்படியா சாரி தருண் அப்படின்னா வேற பெயர் வைச்சிக்கலாம், இதுக்காக ஏன் கோச்சிக்கறீங்க ப்ளீஸ் கூல் டவுன்” என சொல்ல அவன் தன் கோபத்தை விரட்டிவிட்டு தனது விரலால் அவளின் கன்னத்தில் கோலம் இட அவளுக்கு உள்ளுக்குள் தீயாய் சுட்டது, ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வெட்கத்தில் சிணுங்கி விலகிச் சென்றாள்
”நீ இப்படியே இரு ஹரிணி அப்பதான் நம்ம வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்”
”கண்டிப்பா இருப்பேன் தருண் நான்கூட நீங்க என்கிட்ட அத்துமீறி நடந்தப்ப ரொம்ப ஷாக்காயிட்டேன், கோபம் தலைக்கு மேல வந்தது ஆனாலும் அந்தச் சமயம் இளங்கோ சொன்னது நினைவுக்கு வந்த பின்னாடி நான் என் கோபத்தை விரட்டிட்டேன்”
”இளங்கோவா அப்படி என்ன சொன்னான் அவன்“
”இளங்கோவோட நான் வாழ்ந்தப்ப சதா குழந்தைகளை பத்திதான் அவன் பேசுவான், அவனுக்கு குழந்தைகள்னா அவ்ளோ பிடிக்கும், குழந்தை வேணும்னு நாங்க நிறைய முயற்சி செய்தோம் ஆனா கடைசியில” என அதற்கு மேல் அவளால் பேச இயலாமல் அமைதியாக
”ரிலாக்ஸ் ஹரிணி இனிமேல வருத்தப்படறதால எதுவும் ஆகிடாது” என சொல்ல அவளோ அவனின் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டு கண்கள் மூடினாள், மூடிய கண்ணில் இளங்கோ தெரிந்தான் அதில் அவள் மென்மையாக சிரிக்க அந்தச் சிரிப்பு தனக்கென நினைத்து அவளை அணைத்துக் கொண்டான்.
மறுநாள் பொழுது விடிந்தது வழக்கம் போல் இல்லாமல் ஹரிணி இன்று குடும்பத்தலைவியாக தருணின் மனைவியாக நடந்துக் கொண்டாள். அவளின் செயல்களைக்