”அப்படியா ஆமாம் அழகாதான் இருக்கு உனக்குப் பிடிச்சிருக்கா”
”ஓ ரொம்ப பிடிச்சிருக்கு“
”அப்ப நாம அந்த குழந்தையை தத்து எடுத்துக்கலாமா” என கேட்டதும் அவளுக்கு திக்கென்றது.
அதிர்ச்சியுடன் தருணை பார்க்க அவனோ
”ஹரிணி குழந்தை வேணும்னு நீ ஆசைப்படற, நல்ல விசயம்தான் பாவம் இந்த குழந்தைகளைப் பாரு, அநாதையா வளர்றாங்க, இவங்கள்ல இருந்து ஒருத்தரை நாம தத்து எடுத்து வளர்க்கலாமே இதுவும் நல்ல விசயம்தானே”
”நல்ல விசயம்தான் ஆனா, அதை நாம ஏன் செய்யனும், நமக்கு குழந்தையே பிறக்காதுன்னு முடிவான பின்னாடி வேணா இந்த இடத்துக்கு வந்து நிச்சயமா ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம்”
”முதல்ல இங்க இருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்துப்பாரு, அப்பதான் குழந்தைகளை வளர்க்கறது எவ்வளவு கஷ்டம்னு உனக்கேத் தெரியும்“
”என்ன உளர்றீங்க தருண்”
”பின்ன நீ இப்ப பெரிய பதவியில இருக்க, வேலைகள் அதிகம் இதுல நீ எப்படி குழந்தையை வளர்த்து ஆளாக்குவ”
”அதுக்கு”
”அதுக்குதான் இப்போதைக்கு குழந்தை வேணாம்னு சொன்னேன், நீ கேட்க மாட்டேங்கற, நமக்கு ஒரு குழந்தை பிறந்து அதை நீ சரியா வளர்க்காம போயிட்டா, நம்ம ரெண்டு பேருக்குமே கஷ்டமாயிடும், அதை விட இங்கிருந்து ஒரு குழந்தையை அவசரத்துக்கு தத்து எடுத்துக்க அதை வளர்த்துப் பாரு, உன்னால முடிஞ்சா அப்புறம் வேணா நாம குழந்தையை