”நல்லா சொன்னான் அவன் சரி உன் அண்ணன் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கமாட்டானா”
“செய்வாரு”
“எப்ப நான் வேணா உனக்கு மாப்பிள்ளை பார்க்கட்டுமா” என சொல்ல அவள் கோபமாக எழுந்து அவன் முன் நின்றவள்
”எனக்கான மாப்பிள்ளையை நான் தேடிட்டேன்” என சொல்ல வியந்தான் தேவா
”ஓ அப்படியா நல்லது சீக்கிரமா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகு, நான் வேணா உன் அண்ணனுக்கு பொண்ணை பார்க்கட்டுமா”
”இல்லை வேணாம்” என அவள் அலற தேவா அவளை அமைதியாக்கினான்
”ஏன் கத்தற தூங்கறவங்க இங்க வந்து உன்னையும் என்னையும் பார்த்து தப்பா நினைக்கனுமா”
“சாரி”
“சரி யார் உனக்கான மாப்பிள்ளை எந்த ஊரு பாரினா சென்னையா”
“இந்த ஊர்தான்”
“ஓ யாரு நான்னு மட்டும்சொல்லிடாதம்மா”
”ஏன் சொல்லக்கூடாது”
“காரணம் இருக்கு எனக்கு ஏற்கனவே ஒரு பொண்ணு இருக்கு, நான் அவளை லவ்