”விடுங்க விடுங்க”
“முடியாதுடி”
“இப்பதான் கவனம் வந்துச்சா”
“தாஸ் இருந்தானே”
“அண்ணாதான் புரிஞ்சிக்கிட்டு போனார்ல”
“ஆமாம் எனக்குதான் புரியலை சாரிடி”
“ம்ஹூம் விடுங்க என்னை” என அவள் திமிற அவனோ சிரித்தபடியே அவளின் சின்ன கோபத்திற்கு பதிலாக அவள் உதட்டில் முத்தம் வைக்க அதோடு அவளது கோபம் மாயமானது.
10 நிமிடத்திற்கு பின் வெட்கத்துடன் ஆபிஸ் விட்டு வெளிய வந்த அன்பு தங்கையைக் கண்டு அரக்க பரக்க ஓடிவந்து அவள் முன் நின்றவன் அவளது கோலத்தைக் கண்டு திகைத்தான் பின்னாடி வந்த தேவாவிடம்
”என்ன செஞ்ச இவளை” என கோபமாக சைகை செய்ய அவனோ
”ஒண்ணும் செய்யலைடா” என்றான் சிரித்தபடியே
”சொல்லு” என கத்த அதற்குள் கீர்த்தனா வெட்கத்துடன் அங்கிருந்து சென்றுவிட
தாஸ் அவனிடம்
”வேணாம் இன்னும் கல்யாணம் ஆகலை அதுக்குள்ள குழந்தை வேணாம்” என அவன்