”பணம் இல்லையா நான் தரேன்” என்றான்
”ம்ஹூம்” என தலையை வேகமாக ஆட்ட தேவா குழம்பினான்
”காலையில செயினுக்கு நான்தானே பணம் தந்தேன்” என கேட்க அவனோ அது என் சம்பளம் என சொல்ல சிரித்தான் தேவா
”ஓ உன் காசுல நீ நகை வாங்கனுமா”
“ஆமாம்” என்பது போல் தலையை வேகமாக ஆட்ட
”சரி அடுத்த மாசம் சம்பளத்துக்கு இப்பவே நீ நகையை வாங்கிடு.” என சொல்ல தாஸ் சந்தோஷப்பட்டான். உடனே அந்த தாலியை எடுத்து கடைக்காரனிடம் கொடுத்து பேக் செய்ய சொன்னான். அவனும் அதை எடுத்துக் கொண்டு செல்ல அடுத்து தேவா கீர்த்தனாவிடம்
”உன் அண்ணனே பொறுப்பான ஒரு வேலையை செஞ்சிட்டான். வா நான் உனக்கு நகை எடுக்கறேன். சீக்கிரமா நல்ல டைம் கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கலாம் வாவா” என அவளை அழைத்துக் கொண்டு ஓரிடம் அமர்ந்தவன் அங்கு வந்த கடைக்காரனிடம்
”கல்யாண பொண்ணுக்கான நகைகளை காட்டுங்க என சொல்ல
”சார் நிறைய மாடல் இருக்கு நீங்க புக்லெட் பாருங்க, நான் நகைகளை கொண்டு வரேன்” என சொல்லி பெரிய புக்லெட்டை கொடுத்தான். அதை வாங்கி பொறுமையாக பிரித்துப் பார்க்க பயந்தாள் கீர்த்தனா
”அய்யோ இது என்ன எல்லாமே பெரிசா இருக்கு, வேணாம் நான் சின்ன சின்னதாவே நகை எடுத்துக்கறேன்” என சொல்ல தேவாவோ
”என்னது சின்னதாவா என் பொண்டாட்டி நீ இப்படி பெரிசா நகைகள் போட்டாதானே எனக்கு