”என்ன பேச்சு இது வான்னா வாயேன்”
”என்ன அதட்டற உன் பேச்சை கேட்டு நடக்கற காலம் மாறிப் போச்சி, என் தயவுலதான் நீயிருக்க, அதை மறந்துடாத எனக்கு வீட்டுக்கு வர பிடிக்கலை, அதனால ப்ரெண்ட் வீட்ல இருக்கேன்“
”ப்ரெண்டா எந்த ப்ரண்ட்“
”அது எதுக்கு உனக்கு”
”எனக்கு நீ பதில் சொல்லித்தான் ஆகனும், நான் உன் கணவன்“
”ஆமா பொல்லாத கணவன் வெத்துவேட்டுதானே நீ, வீட்டுக்கு வந்தா மட்டும் உன்னாலதான் எதுவும் செய்ய முடியாதே பேசாம போய் படுத்து தூங்கு, நான் நாளைக்கு நைட் வரேன்“
”என்னது நைட்டா விளையாடாத ஹரிணி எனக்கு கோபம் வருது, மரியாதையா வீட்டுக்கு வா“
”உன் அதிகாரத்தையெல்லாம் வேற யார்கிட்டயாவது வைச்சிக்க“
”என்னடி திமிரா பேசற, எவன்கூட கூத்தடிக்கற“
”ஆமாம் ஜாலியா என்ஜாய் பண்றேன், இப்ப என்ன அதுக்கு“
”வேணாம் ஹரிணி எனக்கு துரோகம் இழைக்காத”
“நீயே பெரிய துரோகி, நீயெல்லாம் இப்படி பேசவே கூடாது“
”என்னடி கொழுப்பா“