”நீயே பாரு இந்தா” என சொல்ல அவளும் அந்த ரிசல்ட்டை வாங்கிப் படித்து பார்த்து அதிர்ந்தாள்
”தெரியும்டி உன்னைப் பத்தி சே”
”இல்லை இது பொய்“
”எது பொய் இதுதான் உண்மை என்னவோ பத்தினியாட்டம் பேசின, பார்த்தியா உன்னோட உண்மையான முகம் தெரிஞ்சிடுச்சி, ரிசல்ட் பார்க்கறதுக்கு முன்னாடி கூட உன் மேல அவ்ளோ நம்பிக்கை வைச்சிருந்தேன், என்னை இப்படி ஏமாத்திட்டியே துரோகி” என பழி போட அவளுக்கே ஒரு மாதிரியாகிவிட்டது, இது எப்படி சாத்தியம் என்றுதான் யோசித்தாள் அவள் அழவில்லை, கலங்கவில்லை, அவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை, மன்றாடவில்லை, அதைக்கண்டு தருணுக்கு ஆத்திரமே வந்தது
”நீயெல்லாம் என்ன ஜென்மமோ இப்ப தெரிஞ்சது உன் யோக்யதை, இது ஒண்ணே போதும், இதை கோர்ட்ல காட்டி டைவர்ஸ் வாங்கறேனா இல்லையான்னு பாருடி, இப்பவே இந்த வீட்டை விட்டு போறேன், நாளைக்கு கோர்ட்ல சந்திக்கலாம் குட்பை” என சொல்லிவிட்டு தருண் தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு அப்போதே அந்த வீட்டை விட்டு சென்றுவிட அவன் செல்வதைக் கண்டும் அவள் பதறவில்லை போனால் போகிறான் என விட்டுவிட்டாள் ஆனால் அவளின் கவலையே வேறு
”நாம தப்பு செய்யலை ஆனா ரிசல்ட் தப்பாயிருக்கே என்னவோ நடந்திருக்கு இது தருணோட வேலையா, அப்படின்னா உண்மையான ரிசல்ட் என்னாச்சி அந்த க்ளீனிக்ல போய் விசாரிக்கனும்” என நினைத்து அந்த நொடியே கிளம்பிச் சென்றாள்.
க்ளீனிக்கில் இருந்த மருத்துவரிடம்
”உண்மையை சொல்லுங்க ரிசல்ட் ஏன் தப்பா கொடுத்தீங்க“
”இதுல தப்பா கொடுக்க என்ன இருக்கு நீ தப்பு செய்துட்ட, அதை நான் கண்டுபிடிச்சி