”ஆனா, என்கிட்ட வந்தியே அதை மறந்துட்டியா, கல்யாணத்துக்கு முன்னாடியே என்னை உன் வீட்ல தங்க வைச்சியே, ஏதோ நான் நல்லவன், அதனால உன்கிட்ட கண்ணியமா நடந்துக்கிட்டேன், என்னைப் போல இதுக்கு முன்னாடி எத்தனை பேரை நீ வீட்ல தங்க வைச்சியோ யார் கண்டா”
”தருண்” என கோபத்தில் வெடித்தாள் ஹரிணி
”ஓ கோபம் வருதா சரி சரி கோபம் வர்றதும் சகஜம்தானே”
”இப்ப உனக்கு என்னதான் வேணும்”
”என் குறையை சொல்லி நீ டைவர்ஸ் வாங்க நினைச்ச, நான் உன் நடத்தையை சொல்லி டைவர்ஸ் வாங்க போறேன் எப்படி வசதி”
”நிறுத்து இதோட”
”நீதானே ஆசைப்பட்ட டைவர்ஸ் வேணும்னு, இப்ப நானே தரேன்ங்கறேன் நீ அமைதியா இருக்க, ஓ மானம் போயிடும்னு பயப்படறியா“
”ஸ்டாப்பிட் தருண் கண்டபடி பேசி வைக்காத நான் ஒழுக்கமாதான் இருக்கேன்“
“அதுக்கு என்ன காரண்டி”
”அதுக்கு நான் என்ன செய்யனும்”
”என்கூட நாளைக்கு ஆஸ்பிட்டலுக்கு வா“
”எதுக்கு”