என சொல்ல அவனோ அதிர்ந்தான் வேர்த்துக் கொட்டியது
”இதை ஏன் என்கிட்ட முன்னாடியே சொல்லலை”
”ஏன் சொல்லனும்”
”அந்த டைரியை படிச்சுமா நீ என்னை கல்யாணம் செய்துக்கிட்ட“
”ஆமாம்”
”முட்டாளா நீ”
“இல்லைடா உன்னை பழிவாங்கத்தான் உன்னை கல்யாணமே செய்துக்கிட்டேன்”
”பழிவாங்கவா ஓ பவானியோட சாவுக்கு நான்தான் காரணம்னு நினைச்சி பழிவாங்க வந்தியா பைத்தியமே அவள் என்ன உனக்கு உறவா, அவளுக்காக நீ ஏன் உன் வாழ்க்கையை அழிச்சிக்கனும்”
”அவளுக்காக மட்டும் இல்லை இளங்கோவுக்காகவும்தான்”
”இதுக்கு நடுவில அவன் எங்கிருந்து வந்தான்“
”இளங்கோவை நீதான் கார் ஏத்தி கொன்னேன்னு எனக்கு முன்னாடியே தெரியும்டா” என சொல்ல அவனுக்கு மின்சாரம் தாக்கியது போல உறைந்து நின்றான்
”ஏய் நீ பொய் சொல்ற”
”பொய் சொல்றதெல்லாம் உன்னோட வேலை, எனக்கு பொய் சொல்ல வராது, உன் வாயாலயே நீயே இளங்கோவை கொன்னேன்னு ஒத்துக்கிட்ட“