”நானா எப்போ எதையாவது உளறாத”
”மறந்துட்டியா சரி இரு நான் உனக்கு ஆதாரம் காட்டறேன்” என சொல்லி தன் செல்போனில் இருந்த வீடியோவை அவனுக்கு காட்டினாள். அதைக் கண்டதும் அவனுக்கு திக்கென்றது, அவளிடம் இருந்து செல்போனை பறிக்க வர அவளோ தடுத்தாள்
”அவசரப்படாத என்கிட்ட இந்த வீடியோ நிறைய காப்பி இருக்கு இந்த செல்போனை நீ உடைச்சா, உடைச்சிக்க எனக்கு கவலையில்லை” என சொல்ல அவன் பயந்தான்
”இந்த ஒரு விசயம் போதும் காலத்துக்கும் நீ ஜெயில்ல கிடப்ப“
”வேணாம் ஹரிணி தேவையில்லாத வேலையை செய்யாத, அந்த வீடியோவை அழிச்சிடு“
”நீ சொன்னா நான் கேட்கனுமா போடா“
”ஹரிணி என்னை கொலைகாரனாக்காத”
”ஓ இதை வேற செய்வியா அதுசரி உன்னை காப்பத்திக்க நீ என்ன வேணும்னாலும் செய்வேன்னு எனக்குத்தான் தெரியுமே, படுபாவி நிவேதினி பவானி, விசயத்தில நீ செய்த அத்தனை கொடுமைகளும் எனக்குத் தெரியும்”
”நிவேதினியா”
”ஆமாம் அவள் பாவம் உன்னை உயிருக்குயிரா காதலிச்சி உன்னையே கல்யாணம் செய்துக்கிட்டவ, அவளுக்கு போய் துரோகம் இழைக்க எப்படிதான் உனக்கு மனசு வந்தது“
”என்னடி உளர்ற”
”உளறலை இரு, உனக்கு நான் ஒருத்தரை காட்டறேன் அவங்க யாருன்னு தெரியுதான்னு பார்க்கலாம்” என சொல்லி ஹரிணி அங்கிருந்து விலகி எங்கோயோ சென்று கையுடன் அந்த