அனைவருக்கும் பரிமாறிவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.
சாப்பிட்டு முடித்து எழுந்த கையோடு வந்தனா அனைவருக்கும் டீ போட்டு கொடுத்தாள். வேலைக்கு செல்பவர்கள் சென்றார்கள் மற்றவர்கள் வழக்கம் போல் தங்கள் வேலைகளில் மூழ்கினார்கள். இம்முறை மதியம் லன்ச்சிற்கு என்ன செய்ய வேண்டும் என 4 பெண்களுமே தீவிரமாக யோசித்தனர். தாத்தாவின் மனதில் இடம் பிடிக்க வேண்டி அவர்கள் யோசித்து தங்களது திறமையை காட்ட எண்ணினார்கள். வெள்ளிக்கிழமை நான் வெஜ் சாப்பிடக்கூடாது என தாத்தா சொன்னதால் காலையில வைத்த டிஷ்ஷை பத்திரப்படுத்தினாள் மிருதுளா. மதியத்திற்கு ஏதோ சைவ உணவை சமைக்க எண்ணினாள்.
சோனாவும் தாய் ரெசிபி செய்தாள். வந்தனா காலையில் செய்த புளியோதரை இருக்கவே பேருக்கு சாதமும் சாம்பாரும் செய்தாள். மிருதுளா நந்தினி நேற்று செய்ததை போலவே வெஜிடபிள் பிரைட் ரைஸ் செய்துவிட்டாள். நந்தினி மட்டும் வெள்ளிகிழமை என்பதால் 5 வகை சாதம் செய்தாள். அனைத்துமே கொஞ்சமாக செய்திருந்தாள்.
சாதத்தை முதலில் தயார் செய்தவள் அந்த சாதத்தில் சிறிது எடுத்து அதை தயிர்சாதமாக மாற்றினாள் சிறிது சாதத்தை வைத்து எலுமிச்சை மீதியிருந்த சாதங்களில் சாதமும் தேங்காய் சாதமும் மாங்காய் சாதமும் தக்காளி சாதமும் செய்தாள். அந்த சாதத்திற்காக உருளைக்கிழங்கு கறியை செய்தாள். அதற்காகவே டிபன் சாப்பிட்டுவிட்டு உடனே கிச்சனுக்கு சென்றவள் அனைத்தையும் தயார் செய்தாள். அப்போதுதான் சாதமும் அதன் கலவையுடன் ஊறியிருக்கும் என நினைத்தாள். வீட்டில் இருந்த அரிசி வடாமை பார்த்த நந்தினிக்கு ஒரு யோசனை தோண்றி அனைவரும் சாப்பிட அமரும் போது அதை எண்ணெயில் பொறித்து எடுத்து பரிமாறினால் சூடாகவும் சுவையாகவும் இருக்கும் அனைவருக்கும் பிடித்து போகும் என எண்ணினாள். எண்ணியவாறே ஒரு மணிக்கு வடாமை பொறிக்க சென்றவள் அதை செய்து கொண்டு வந்து தான் செய்த டிஷ்களுடன் வைத்தாள்.
மதியம் 1 மணி
வீட்டில் இருந்தவர்கள் டைனிங் ஹாலுக்கு வந்துவிட தாத்தா சோனாவை அழைத்தார்
”சோனா வாம்மா வந்து நீ செஞ்ச டிஷ்ஷை பரிமாறு” என அழைக்க அவளும் தான் செய்த