தெரியவில்லை அவர்கள் ஆனந்தை கண்டதில்லை. ஆனால் ஆனந்த் இருந்த போது வேலையில் இருந்த சிலர் ஆனந்தின் வரவை எண்ணி மகிழ்ந்தார்கள், அதிலும் செல்லப்பாவின் முகத்தில் மத்தாப்பு ஒளிர்ந்தது, அதைக்கண்ட வெங்கடேசனோ
”என்ன செல்லப்பா உங்க முகத்தில கலர் பல்புகளா எரியுதே என்ன விசயம்”
”ஆனந்த் தம்பி வரப்போறார்ங்கற விசயத்தை கேள்விப்பட்டதும் சந்தோஷத்தில என் முகம் பிரகாசமாயிடுச்சி சார் ஆமா தம்பி எப்ப வருவாரு”
”வருவான் கொஞ்ச நாள்ல”
”ஏன் சார் இத்தனை நாள் வராம இருந்தாரு“
”உங்களுக்கே தெரிஞ்ச விசயம்தானே இந்த பிசினஸ் சம்பந்தப்பட்ட படிப்பை படிக்க போனான்ல மறந்துட்டீங்களா”
”மறக்கலை மறக்கலை ஆக படிப்பு முடிஞ்சி வராரா சார்“
”ஆமாம் படிப்பு முடிஞ்சி கொஞ்ச நாள் வேற கம்பெனியில வேலை பார்த்து அனுபவத்தோட வரான், வந்ததும் பாருங்க செல்லப்பா இந்த கம்பெனி எவ்ளோ தூரம் உயர போகுதுன்னு”
”இப்பவே நல்லாதானே ஓடுது சார் உங்க திறமையில கம்பெனி ரொம்பவே உயர்ந்திருக்கே“
”இன்னும் வானளவு உயரனும்லயா அதுக்கு ஆனந்த் வரனும், அவனுக்காக கேபின் ஒதுக்கியாச்சி என்னிக்கிருந்தாலும் அவன் நிச்சயமா வருவான், சரி அக்கவுண்டண்ட் கூப்பிடுங்க”
”எதுக்கு சார்“