(Reading time: 29 - 57 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

தம்பியை தட்டி எழுப்ப அவனோ தூக்கம் கலைந்து கொட்டாவி விட்டபடியே

   

”நீயா” என அலுத்துக் கொண்டு மீண்டும் உறங்க முயல ஆனந்தி விடவில்லை அவனின் தோளில் அடிபோட்டு எழுப்பி விட அதில் அவன் நொந்தபடியே அவளிடம் பேசினான்

   

”உசுரை வாங்கறதுக்குன்னே கூட பிறந்தியா நீ, ஒரு மனுஷன் நிம்மதியா இருக்கற நேரமே தூங்கற நேரம்தான் அதை கெடுக்கறதுக்குன்னே வந்தியே இப்ப உனக்கு சந்தோஷமா”

   

”ஆமா சந்தோஷத்தில துள்ளி குதிக்காத குறைதான், ராஸ்கல் என்னடா இதெல்லாம்” என அவள் மதுபாட்டில்களை காட்டி கேட்க அவனோ அவளிடம்

   

”ஏன் இதுக்கு முன்னாடி இதை நீ பார்த்ததில்லை, அப்பா குடிப்பாரே அதே பிராண்டுதான், சுமாராயிருக்கு வேற வழியில்லாம குடிச்சேன்“

   

”அடிவிழும் பாரு அவர் குடிச்சி குடிச்சி நாசமா போன மாதிரி நீயும் நாசமா போகப் போறியா”

   

”சே சே அந்தாளும் நானும் ஒண்ணா அக்கா எனக்கு லிமிட் தெரியும்”

   

”எது லிமிட்டு இதுவா 4 பாட்டில் இருக்கு”

   

”கணக்கு பார்த்து என் மேல கண்ணு வைக்காதக்கா அப்புறம் எனக்கு வயித்துவலி வரும்” என சொல்ல அதைக்கேட்டு வெங்கடேசன் கலகலவென சிரிக்க ஆனந்திக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து வெங்கடேசனின் தோளில் ஒரு அடிபோட்டாள்

   

”அடிப்பாவி என்னை ஏன் அடிச்ச“

   

”அவனை கண்டிக்கறதை விட்டுட்டு நீங்களும் இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்“

   

”அவன் என்ன குழந்தையா அடிச்சி திருத்தறதுக்கு, அதோட அவன் பேச்சில நிதானம் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.