(Reading time: 29 - 57 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

ஆனந்தியின் பிறந்த வீட்டு முன் இருவரும் நின்றார்கள்

   

”ஆனந்தி உன் தம்பி இங்க இருக்கற மாதிரி சுவடே தெரியலையே, மறுபடியும் எங்கயாவது போயிட்டானா வீடு என்ன இந்த கோலத்தில இருக்கு” 

   

”அதான்ங்க எனக்கும் புரியலை ஆனா வாசற்கதவு திறந்துதானே இருக்கு, வாங்க பார்க்கலாம்“

   

“ரிஸ்க் எடுக்கனுமா இரு நான் போன் பண்றேன் அவனுக்கு”

   

”அட வாங்க நாம என்ன காட்டுக்குள்ளயா போறோம், வீட்டுக்குள்ளதானே வாங்க” என வெங்கியின் கையை பிடித்து இழுத்தபடி உள்ளே சென்றாள் ஆனந்தி.

   

இருவரும் வீட்டிற்குள் சென்றார்கள் வீடு ஒட்டடையும் தூசியுமாக இருப்பதைக் கண்டு மனம் வருந்தினாள் ஆனந்தி

   

”எப்படியிருந்த வீடு இப்ப இப்படியாயிடுச்சி, நானாவது அடிக்கடி வந்து போயிருக்கனும் தப்பு பண்ணிட்டேன்” என கண்கள் கலங்க வெங்கியோ நொந்துப் போனான்

   

”ஏய் நீ அழறதுக்காகவே காரணம் தேடுவியா என்ன அழறதை நிப்பாட்டிட்டு உன் தம்பியை தேடு” என சொல்ல அவளும் கண்ணீரை துடைத்துக் கொண்டு ஆனந்தை தேடலானாள்.

   

ஒருவழியாக இருவரும் ஆனந்தின் அறைக்குள் நுழைந்தார்கள், அங்கு அவனோ நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான் அந்த ஒரு அறை மட்டும் சுத்தமாக இருந்தது, அவன் படுத்திருந்த இடத்திற்கு பக்கத்தில் மது பாட்டில்களும் பாதி பிரியாணி பொட்டலமும் ஈமொய்த்தபடி இருக்க அதைக்கண்ட வெங்கி கலகலவெனச் சிரித்தான்

   

”வாழ்வுதான் இவனுக்கு எப்படி வாழ்றான் பார்த்தியா, நானும் இருக்கேனே என்னத்துக்கு” என சொல்ல ஆனந்தியோ தன் கணவனை கோபத்தில் ஒரு முறை முறைத்துவிட்டு தன் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.