”இத்தனை நாளும் வர்ற லாபத்தில ஆனந்துக்குன்னு பணத்தை ஒதுக்கி வைச்சோம்லயா, அந்த கணக்கை எடுத்து வைக்க சொல்லனும், ஆனந்த் வந்தா காட்டனும்லயா” என சொன்னதும் செல்லப்பா அதிர்ந்தார்
”தம்பி கணக்கெல்லாம் பார்க்க மாட்டாரு சார், உங்க மேல அவருக்கு நிறைய நம்பிக்கையிருக்கு”
”குடும்பம் வேற பிசினஸ் வேற அவனுக்கு என் மேல நம்பிக்கையிருந்தாலும் அதுக்காக அவனுக்கு இங்க என்ன நடக்குது, ஏது நடக்குதுன்னு சொல்லாம இருக்க முடியுமா, அவனுக்குன்னு ஒதுக்கின பணத்தை தர்றதுதானே சரியா இருக்கும்” என சொல்ல செல்லப்பா திடுக்கிட்டு
”சார் அது வந்து“
”நேரமாகுது அக்கவுண்டண்ட் கூப்பிடுங்க சீக்கிரம்” என சொல்ல செல்லப்பாவும் வேறு வழியில்லாமல் அக்கவுண்டண்டை கண்டு பேச அவனோ பதறினான்
”யோவ் என்னய்யா இப்ப வந்து இப்படி சொல்ற, போச்சி எல்லாம் போச்சி, வசமா மாட்டிக்கிட்டோம்“
”இப்படியாகும்னு யார் கண்டா”
”இப்ப என்னய்யா செய்றது“
”பொய்யா ஒரு கணக்கை எழுதிக் காட்டு” என செல்லப்பா சொல்ல அதற்கு அக்கவுண்டண்ட்
”மாட்டிக்கப் போறோம்“
”மாட்டிக்க மாட்டோம் ஆனந்த் தம்பியை பத்தி எனக்கு நல்லாவே தெரியும், அவர்