நம்பிக்கையில்லாம கணக்கு வழக்கை பார்க்க மாட்டாரு, வெங்கடேசன் மேல நம்பிக்கை அதிகம், அப்படியே கணக்குல குளறுபடி இருக்குன்னு தெரிஞ்சாலும் அதை வெளிய காட்டிக்கப் போறதில்லை ஏன்னா அக்கா புருஷனை எப்படி சந்தேகப்பட்டு கேள்வி கேட்பாப்பல எப்படியிருந்தாலும் நமக்கு பிரச்சனையில்லை”
”என்னவோ நீ சொல்ற, அதை நான் செய்றேன், ஒருவேளை நான் மாட்டிக்கிட்டா உன் பேரையும் இழுத்துவிடுவேன்“
”ஒண்ணும் ஆகாது நான் இருக்கறப்ப எதுக்கு பயப்படற, எல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ பொய்யான கணக்கு வழக்கை எழுது, ஆனந்த் தம்பி எப்ப வருவார்ன்னு இன்னும் உறுதியா தெரியலை, எப்ப வேணும்னாலும் வந்து நிப்பாரு வெங்கடேசனும் நியாயவாதி போல கணக்கு வழக்கு காட்டுவான், அதுக்குள்ள நாம உஷாராகி ஒரு பொய்யான கணக்கை காட்டிடலாம், ஆனந்த் தம்பிக்கு சந்தேகமே வராது முதல்ல அதை என்னன்னு கூட பார்க்க மாட்டாரு“
”ஆனந்துக்கு சந்தேகம் வராம இருக்கலாம் ஆனா வெங்கடேசனுக்கு சந்தேகம் வந்தா என்ன செய்றது“
”இதுநாள் வரை வரலை இனிமேலயுமா வரப்போகுது சொன்னதை செய்” என செல்லப்பன் சொல்லிய நேரம்
”சார் உள்ள வரலாமா” என இனிமையான குரல் ஒலிக்க அவ்விருவரும் பயத்தில் தூக்கிவாரிப்போட்டு யாரென பார்க்க அங்கு ரோஜா நின்றிருந்தாள்
”சீ நீயா நாங்க யாரோ என்னவோன்னு பயந்துட்டோம்” என சொல்ல ரோஜா மெதுவாக அறைக்குள் வந்து இருவருக்கும் கொண்டு வந்திருந்த டீயை சர்வ் செய்தாள்
”சார் வேற ஏதாவது வேணுமா“
”ஒண்ணும் வேணாம் கிளம்பு” என செல்லப்பா எரிந்துவிழ அவளும் ட்ரேயுடன் அவ்விடம் விட்டு கிளம்பினாள்.