”நேரா வீட்டுக்குத்தானே போற“
என கேட்க அவளோ சற்று தடுமாறி விட்டு பின்
”ஏன் மறுபடியும் என் வீட்டுப்பக்கம் வந்து போகனும்னு ஆசையா உங்களுக்கு“
”எனக்கொன்னும் ஆசையில்லை உன் வீட்டு பக்கம் வரவேண்டிய அவசியம் எனக்கு இல்லை“
”பின்ன காலையில ஏன் வந்தீங்க“
”நான் வழக்கமா போற வழி ப்ளாக் பண்ணிட்டிருந்தாங்க, அதனால குறுக்கு வழியில வந்தேன், அங்க உன் வீடு இருக்குன்னு எனக்கெப்படி தெரியும்“
”அச்சோ இதை நம்பற அளவுக்கு இங்க யாருக்கும் மதிகெடலை, என் வீட்டு பக்கம் வர்றது குறுக்கு வழியா சுத்துவழியாச்சே“
”என் இஷ்டம் நான் எப்படி வேணும்னாலும் வருவேன் உனக்கென்ன“
”அதே போல நான் வீட்டுக்கு போறேன் போகலை, அது என் இஷ்டம் உங்களுக்கென்ன”
என முகத்தில் அடித்தாற் போல பேசிவிட்டு அவள் சென்றுவிட அவமானப்பட்டான் ஆனந்த்.
அவனது காரிடம் செல்லப்பா தயாராக காத்திருந்தார்
”இங்க என்ன செய்றீங்க“
”சார் எப்படியும் நீங்க இன்னிக்கு க்ளப்புக்கு போவீங்கள்ல”