”சொல்ல வைக்கிறேன்“
”பார்க்கலாம்”
”என்ன உனக்கு அவ்ளோ திமிரு“
”என்கிட்ட உண்மையிருக்கு, நேர்மையிருக்கு, அதனால திமிரா இருக்கேன்”
”ஓவரா ஆட்டம் போடாத ரோஜா”
”ப்ச்” என சலித்துக் கொண்டு சட்டென அவ்விடம் விட்டு நகர்ந்து வேறொரு இடத்திற்குச் சென்றாள் ரோஜா, அந்த விலகல் அவனை காயப்படுத்தியது வேண்டுமென்றே அவளைத் தேடி செல்ல அவளும் அவன் வந்தானே என ஒவ்வொரு இடமாக நகர்ந்து நிற்க அவனும் அவளிடம் வந்து நிற்க அவளும் இடம் மாறி போக அவனும் அவளை பின்தொடர இப்படியே நேரம் முடிய அனைவரும் டிரிங்ஸ்க்கு சென்றார்கள்
போதையில் ஆண்கள் இருக்க அவர்களுக்கு மத்தியில் ரோஜா கூல்ட்ரிங்க்ஸ் குடித்தபடி கதை பேசலானாள். அது அவனுக்கு எரிச்சலை தந்தது, அந்த வேகத்தில் அவனும் டிரிங் எடுத்து குடிக்கலானான், செல்லப்பாவோ குடித்து குடித்து போதையில் மயங்கி கிடக்க அவரைக் கண்டு நொந்துப் போனான் ஆனந்த்
ரோஜாவோ ஒவ்வொருவரிடமும் சகஜமாக பேசுவதைக் கண்டு அவனுக்கு குழப்பமே வந்தது
”என்னவோ பலநாள் பழகினவங்க கூட பேசற மாதிரியே பேசறாளே, நேத்து என்னவோ உத்தமி பத்தினி ரேஞ்சுக்கு நம்ம கிட்ட பேசினா, இங்க என்னடான்னா ஒரு ஆம்பளை கூட விடாம பேசிக்கிட்டு அலையறா, சே சரியான கேரக்டர் இல்லாதவளா இருக்காளே, இவளையா நம்ம மாமா நம்பறாரு, அவர் இல்லாத சமயம் அவள் இங்க நடந்துக்கறதை பத்தி அவருக்கு தெரியலை போல, நாமளே அவர்கிட்ட இதை பத்தியெல்லாம்