(Reading time: 20 - 39 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

சொல்லனும்” என நினைத்தபடியே குடிக்கலானான்.

   

ஆனந்துக்கோ  குடி அதிகமாகி போதை தலைக்கேறி தள்ளாடி நிற்க முடியாமல் தடுமாறி விழப்போனவனை தாங்கிக் கொண்டாள் ரோஜா, அவளைக்கண்டதும் அவனுக்கு இன்னும் போதை மயக்கம் ஏறியது

   

”ரோஜா ரோஜா” என அன்பாக அழைக்க அந்த அழைப்பில் கவரப்பட்ட ரோஜாவோ

   

”அடடே என்மேல உங்களுக்கு இவ்ளோ அன்பா, என் அப்பா அம்மா கூட என்னை இவ்ளோ அன்பா ரோஜான்னு கூப்பிட்டதில்லை தெரியுமா, நீங்க கூப்பிடவும் என் உடம்பே சிலிர்த்திடுச்சி”

   

”பேச்சால என்னை  மயக்க நினைக்கறியா ஒருநாளும் அது நடக்காது,  நான் உன் வலையில விழமாட்டேன்” என சொன்னவன் செல்லப்பாவை தேட அவள் புரிந்துக் கொண்டு

   

”போதும் உங்களுக்கு போதை தலைகேறிடுச்சி வாங்க உங்களை நான் உங்க கார்ல விடறேன்” என சொல்லி அவனை இழுக்க அவனோ அவளது இழுப்பில் சென்றான். அவனை அழைத்துக் கொண்டு காரில் ஏற்றிவிட்டு டிரைவர் இருக்கையில் அவள் அமர்ந்துக் கொண்டு வண்டியை ஓட்டினாள், அவனோ போதையில் கண்டபடி உளறிக் கொண்டிருந்தான், அடிக்கடி ரூபா ரூபா என சொல்ல அவளுக்கு வியப்பாக இருந்தது 

   

வண்டியை ஓட்டிக் கொண்டு வெங்கடேசன் வீடு வரை வந்துவிட்டாள். காரைக்கண்டதும் கேட் திறக்கப்பட அவளும் வண்டியை உள்ளே கொண்டு சென்று நிப்பாட்டினாள். வாசலில் ஆனந்தி ஆனந்திற்காக காத்திருந்தாள், வண்டி வரவும் ஆனந்த் வந்துவிட்டான் என்ற நினைப்பில் வர காரை விட்டு ரோஜா இறங்கினாள், அவளைக் கண்டதும் திடுக்கிட்டாள் ரோஜாவோ சின்னதாக சிரித்துவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட ஆனந்தி அவசர அவசரமாக காருக்குள் எட்டிப்பார்த்தாள்

   

போதையில் உளறிக் கொண்டிருந்த ஆனந்தை கண்டதும் நொந்துப் போனாள். வீட்டு வேலையாள் துணையுடன் அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அவனது அறையில் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.