படுக்க வைத்தாள்
மறுநாள் காலையில் ரெடியாகி வந்த ஆனந்தை கேள்வி மேல் கேள்வி கேட்டு வறுத்தெடுத்தாள் ஆனந்தி
”அய்யோ அக்கா ஆளை விடறியா”
”என்னடா விடறது, நேத்து நீ எப்படி வந்தேன்னு தெரியுமா, போதையில சுயநினைவே இல்லாம வந்த உன்னை அப்படி பார்த்ததும் எனக்கு நம்ம அப்பா ஞாபகம்தான் வந்தது, அவரும் இப்படித்தான் குடிச்சி குடிச்சி அழிஞ்சிப் போனாரு, அவருக்கு அடுத்து நீயும் அப்படியே தயாராகி வர்றியா இது சரியில்லை ஆனந்த்”
”அய்யோ அக்கா அப்படியெல்லாம் இல்லைக்கா, சும்மா கொஞ்சம் குடிச்சேன், அது தலைக்கேறிடுச்சி, மாமாவும் இப்படித்தானே வருவாரு அப்புறம் என்ன”
”டேய் நிறுத்துடா உன் மாமா நல்லவரு, குடிக்கமாட்டாரு, யோக்கியமானவரு”
”ஆமாம் அந்த யோக்யதைதான் நான் ஆபீஸ்ல பார்க்கிறேனே”
”இதப்பாருடா நீ எதையோ மனசுல வைச்சிக்கிட்டு பேசறன்னு தெரியுது பேசிக்கோ, எவ்ளோ வேணும்னாலும் பேசிக்கோ ஆனா உன் மாமாவை குறை சொல்ற தகுதி உனக்கு கிடையாது” என கோபமாக சொல்லிவிட்டு அவள் சென்றுவிட அவன் சாப்பிடாமலே அக்கா திட்டியதில் கோபத்துடன் ஆபீஸை அடைந்தான்.
அங்கிருந்த அனைவரின் மீதும் தன் கோபத்தை கொட்ட, அவர்களுக்கு இவனை சுத்தமாக பிடிக்கவில்லை, இவனைப் பற்றி தங்களுக்குள் பேசி திட்டலானார்கள் அதெல்லாம் ரோஜாவும் கவனித்தபடிதான் இருந்தாள்.
செல்லப்பாவே ஆனந்தை தேடி வந்தான்
”சார் என்ன சார் என்னை அம்போன்னு விட்டுட்டு வந்துட்டீங்களே சார், க்ளப்ல இருந்து