(Reading time: 20 - 39 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

என் வீட்டுக்கு போறதுக்குள்ள ஒருவழியாயிட்டேன் சார், இப்படியா விட்டுட்டு போவீங்க” என சொல்ல அவனோ வியந்தான்

   

”அப்போ நீங்க என்னை என் வீட்ல ட்ராப் பண்ணலையா”

   

”என்னை ட்ராப் பண்ணவே யாருமில்லாம, நடந்தே வீடு போய் சேர்ந்தேன் சார்“

   

”அப்போ என்னை யாரு கூட்டிட்டுப் போனா“

   

”தெரியலையே சார்”

   

என சொல்லவும் ஆனந்திற்கு சட்டென ரோஜாவின் நினைப்பு வந்தது, நேற்று நடந்ததும் நினைவுக்கு வந்தது அவனுக்கு அவளின் மீது பொல்லாத கோபம் வந்தது

   

”செல்லப்பா போய் ரோஜாவை உடனே என்னை பார்க்க அனுப்புங்க“

   

”இப்பவேவா சார்“

   

“ஆமாம்“

   

”ஏன் சார் ஏதாவது பிரச்சனையா”

   

”ஆமாம்”

   

”அப்படின்னா அவளை வேலையை விட்டு விரட்டப்போறீங்களா“

   

”ப்ச் சொன்னதை செய்ங்க செல்லப்பா அவளை அனுப்புங்க” என சொல்ல செல்லப்பாவும் குதூகலமாக சென்றார்

   

சில நிமிடங்களில் ரோஜா வந்தாள்

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.