தட்டிவிட்டாள்
”சாரி சாரி, உனக்கு வலிக்குதா”
”பின்ன வலிக்காம இருக்குமா நீங்களும் நின்னு பாருங்க தெரியும்“
”வலிக்கறப்பவே சொல்லியிருக்கலாம்ல”
”நான் உங்ககிட்ட கெஞ்சனும்னு ஆசைப்பட்டீங்க போல“
”சே சே அப்படியில்லை உன்னோட ஒர்த் தெரிஞ்சிக்கலாம்னு ஆனா, நீ திடமா நின்ன இவ்ளோ உறுதியை நான் எங்கயும் பார்க்கலை“
”சந்தோஷம் நான் கிளம்பறேன்” என சொன்னவள் எழுந்து நின்று ஒரு அடி எடுத்து வைத்து மேற்கொண்டு நடக்க முடியாமல் தடுமாற அவளை தாங்கிக் கொண்டான் ஆனந்த். அவளோ அவனை விட்டு விலகினாள்
”கஷ்டப்படாத இரு நானே உன்னை ட்ராப் பண்றேன்“
”தேவையில்லை உங்களை போல ஒரு சைக்கோவை நம்பி நான் எங்கயும் வர்றதாயில்லை, போற வழியில என்னை கொலை கூட செய்வீங்க”
”ஏய் நான் ஒண்ணும் சைக்கோ இல்லை”
”எந்த சைக்கோ தான், தன்னை சைக்கோன்னு ஒத்துக்கிட்டு இருக்கு நீங்க மட்டும் ஒத்துக்குவீங்களா“
”இப்ப நான் என்ன செய்துட்டேன்னு என்னை சைக்கோன்னு பழி போடற“
”என்னை 5 மணி நேரமா ஒரே இடத்தில நிக்க வைச்சீங்களே, அதுக்கு பேரு என்னவாம், நீங்க இந்த ஆபீஸ் முதலாளிங்கறதால உங்ககிட்ட வேலை செய்றஙவங்களை இப்படியா