(Reading time: 20 - 39 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

”காலையிலயே மீட்டிங் முடிஞ்சது அதான் உடனே கிளம்பி வந்துட்டேன், மீட்டிங் நல்லபடியா முடிஞ்சது, நமக்கு லாபம்தான் ஆனந்த்“

   

”ஓ அப்படியா” என சொன்னவன் ஆனந்தியை பார்க்க அவளோ முகத்தை தூக்கி வைத்துக் கொள்ள அவளிடம் சென்று கெஞ்சினான் ஆனந்த்

   

”அக்கா அக்கா கோச்சிக்காதக்கா ப்ளீஸ்கா நீ இப்படி செய்தா எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கு அக்கா” என சொல்ல அவளோ இன்னும் கோபத்துடன் தன் முகத்தை திருப்பிக் கொள்ள அதைக்கண்டு வெங்கடேசன் கலகலவெனச் சிரித்து

   

”என்னாச்சி அக்காவுக்கும் தம்பிக்கும் சண்டையா”

   

”அது ஒண்ணுமில்லை மாமா” என ஆனந்த் சொல்ல அதற்கு ஆனந்தியோ தன் கணவரிடம்

   

”ஏங்க நீங்களே இதை கேளுங்க” என ஆரம்பித்து நேற்று அவன் குடித்துவிட்டு வந்ததை சொல்லி ஒப்பாரி வைக்க வெங்கடேசனால் சிரிப்பை அடக்க இயலாமல் போனது.

   

ஆனந்தோ ஆனந்தியின் காலில் விழாத அளவுக்கு கெஞ்சிவிட்டு முடிவில் அவள் முன் சிலை போல நின்றான்

   

”உன் கோபம் குறைஞ்சி நீயா என்னை வந்து கூப்பிடறவரைக்கும் நான் இதே இடத்தில இப்படியேதான் நிப்பேன் அக்கா” என சொல்ல அவளோ அதை பெரிதாக எண்ணாமல் தன் அறைக்குச் சென்றுவிட வெங்கடேசனோ

   

”ஆனந்த் அவள் கோபம் நாளைக்கு காலையில போயிடும், இதுக்காக நீ இப்படி உனக்கு நீயே தண்டனை கொடுத்துக்கனுமா என்ன, விடு போய் தூங்கு போ”

   

”இல்லை மாமா நான் செஞ்சது தப்பு, அதுக்கான தண்டனையை நானே எனக்கு கொடுத்துக்கிறேன் நீங்க போங்க மாமா கண்டிப்பா அக்கா வந்து என்னை கூப்பிடுவாங்க” என சொல்ல வெங்கடேசனும் துக்க பெருமூச்சுவிட்டு தன் அறைக்குச் சென்றார், அங்கு 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.