(Reading time: 20 - 39 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

ஆனந்தியோ கண்ணீரும் கம்பலையுமாக இருக்க அவளின் புலம்பலை கேட்டு உறக்கம் கெட்டு வெங்கடேசன் நொந்துக் கொண்டே அவளிடம்

   

”ஆனந்தி போதும்மா பாவம் ஆனந்த் ரொம்ப நேரமா நின்னுக்கிட்டு இருக்கான் கால் வலிக்க போகுது அவனுக்கு, உன்னை விட்டா அவனுக்கு யார் இருக்கா சொல்லு”

   

”அதுக்குன்னு ரூபாவை நினைச்சி இவன் குடிச்சி குடிச்சி அழியனுமா, என்னால இதை பார்த்து தாங்க முடியலைங்க“

   

“எல்லாம் அவன் மாறிடுவான் போ போய் அவனை பாரு போ” என சொல்ல அவளும் ஆனந்தை பார்க்க போனாள், அவனால் முடியவில்லை ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் நிற்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதை அவன் புரிந்துக் கொண்டான், எப்படி ரோஜாவால் இது முடிந்தது என வியக்கவும் செய்தான், அந்நேரம் ஆனந்தி வரவும் அவளிடம் கைகூப்பி கண்களால் கெஞ்சி

   

”சாரிக்கா” என இதமாக சொல்ல ஆனந்தி உடனே சிரித்துவிட

   

அதோடு அவன் அசைந்தான் கால் ஒரு அடி எடுத்து வைப்பதற்குள் அப்படியொரு வலி வெறும் ஒரு மணி நேரம் நின்றதற்கே இப்படி வலி எடுத்தது அவனுக்கு, ரோஜா 5 மணி நேரம் நின்றாள் அவளுக்கு எப்படியிருக்கும் என நினைத்து அந்நேரம் வருந்தினான்.

   

ஆனந்தியும் அவனுக்கு சாப்பாடு பரிமாறி அவன் சாப்பிடும் வரை இருந்து பார்த்துவிட்டு அவனது அறையில் அவனை படுக்க வைத்து விட்டு

   

”ரூபாவை நீ எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது, அதுக்காக உன் வாழ்க்கையை நீ அழிச்சிக்கலாமா, உன்னை நம்பி நான் இருக்கேன் என்னை மறந்துடாத“

   

”இல்லைக்கா இனிமேல நான் ரூபாவை நினைக்க மாட்டேன்”

   

”சந்தோஷம் நீ தூங்கு” என சொல்ல அவனும் கண்கள் மூடினான் வழக்கம் போல ரூபா 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.