”உள்ளே வரலாமா“
”வந்து தொலை” அவனது அழைப்பில் இருந்த வெறுப்பைக் கண்டு புன்னகையுடன் அவன் முன் நின்றாள்
”அறிவிருக்கா உனக்கு”
”இருக்கறதாலதானே எனக்கு இங்க வேலை தந்தாங்க சார்“
”ப்ச் நேத்து நீ நடந்துக்கிட்டதை பத்திச் சொல்றேன்”
”சார் வெளியிடங்கள்ல நான் எப்படியிருந்தா உங்களுக்கென்ன சார், ஆபீஸ்ல நான் தப்பு செய்தா கூப்பிட்டு கண்டிங்க, அதை விட்டுட்டு போதையில உளறாதீங்க சார்“
”எது நான் போதையில இருக்கேனா நான் தெளிவா இருக்கேன்”
”ஓ அப்போ போதை இறங்கிடுச்சா“
”ஏன் கேட்கற”
”இல்லை நேத்து உங்களை உங்க வீட்ல ட்ராப் பண்ணப்போ கூட உங்களுக்கு நான் யார்ன்னு தெரியலை, ரூபா ரூபான்னு என்னை பார்த்து கூப்பிட்டுக்கிட்டிருந்தீங்க அதனால கேட்டேன்“ என சொல்ல அவனுக்கு வியர்த்துவிட்டது
”ஏய் என்ன பேசற நீ“
”நடந்ததை சொன்னேன் சார், சரி அதை விடுங்க என்னை எதுக்காக இங்க வரச்சொன்னீங்க சொல்லுங்க எனக்கு ஆயிரத்தெட்டு வேலையிருக்கு”
”எது உனக்கு வேலையிருக்கா, நான் பார்க்கறப்பலாம் நீ அடுத்தவங்களோட கதைதானே