குடிக்கலானார்.
சரியாக எட்டரை மணியானதும் விளையாட்டுக்கள் முடிந்து அனைவரும் ஒரு இடமாக குழுமினார்கள், அதில் ரோஜாவும் இருந்தாள், அவள் இருந்த இடம் நோக்கி ஆனந்தும் வந்து நின்றுக் கொள்ள அவளோ அவனைப் பார்த்து
”போன ஜென்மத்தில வண்டா பிறந்தீங்களா சார் இந்த ரோஜாவை சுத்தி சுத்தியே வர்றீங்களே”
”நான் ஒண்ணும் உன்னை தேடி வரலை, எதேச்சையா வந்தேன் நீயிருந்த”
”ஓ சரி சரி நான் அப்படி போறேன்“
”ஒரு நிமிஷம் உனக்கு எப்படி இந்த க்ளப்ல மெம்பர் கார்டு கிடைச்சது”
”வெங்கடேசன் சார் வாங்கித்தந்தாரு, அவர் இல்லாத சமயமா அவர் சார்பா நான்தான் இங்க வருவேன் போவேன்“
”இனிமேல இந்த மாதிரி இடத்துக்கு நீ வரவேணாம்“
”ஏன்“
“சுத்திலும் பாரு ஆம்பளைங்க கூட்டம், நீ ஒருத்திதான் பொண்ணு, இங்கலாம் நீ வந்தா சரியா வராது”
”எனக்கில்லாத பயம் உங்களுக்கு எங்கிருந்து வந்தது, இங்க இருக்கறவங்க என்னை எதுவும் செய்ய மாட்டாங்க”
”இனிமேல நானே இங்க வரேன் நீ வரவேணாம்“
”அதை வெங்கடேசன் சார் சொல்லட்டும்“