கொடுமை படுத்தறது“
”சே இல்லை நான் அப்படி நினைக்கலை“
”வேற எப்படி நினைச்சீங்க”
”அது வந்து அது” என தடுமாற அந்நேரம் செல்லப்பா உள்ளே வந்தார்
”சார் இன்னுமா நீங்க கிளம்பலை” என சொல்லிக் கொண்டே வந்தவர் ரோஜாவை கண்டதும் தயங்கி நின்றார், அவளோ செல்லப்பாவை கண்டும் ஏதும் பேசாமல் விந்தி விந்தி நடந்தபடியே சென்றாள்.
”சார் என்னாச்சி சார் அவளுக்கு” என சந்தேகமாக கேட்க ஆனந்தும் தான் அவளை 5 மணி நேரமாக ஒரே இடத்தில் நிற்க வைத்த விசயத்தை கூற அதைக்கேட்டு மகிழ்ந்தான் செல்லப்பா
”அவளுக்கு இந்த தண்டனை தேவைதான் சார், இப்பதான் என் மனசு குளிர்ந்து போச்சி”
”சரி நான் கிளம்பறேன்“
”நானும் கிளம்பறேன் சார் ரொம்ப நாள் கழிச்சி நான் நிம்மதியா தூங்கப் போறேன் சார்” என சொல்லிவிட்டு செல்லப்பா கிளம்பிவிட ரோஜாவிற்கு தன்னால் ஏற்பட்ட வலியை நினைத்து கனத்த மனதுடன் ஆனந்தும் வீடு திரும்பினான்
அங்கு வீட்டு ஹால் சோபாவில் ஆனந்தியும் வெங்கடேசனும் கதை பேசிக் கொண்டிருக்க அவரைக் கண்டதும் திடுக்கிட்டான் ஆனந்த்
”வா ஆனந்த் உள்ள வா ஏன் அங்கயே நிக்கற”
”மாமா நீங்க எப்போ வந்தீங்க“